Inam லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Inam லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 13 மே, 2021

மலர் 7 இதழ் 27 கட்டுரை வரவேற்றல்


இனம் ஏழாம் ஆண்டில் காலடி வைத்துள்ளது
................................
இனம்: பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் (ISSN:2455-0531)

ஆகஸ்ட் 2021 மலர் :7 இதழ் : 26 
Auguest  2021  | Volume VII Issue 27
பதிப்பிற்குக் கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன. 
இறுதி நாள் : 20 சூன் 2021

அடிப்படைக் கட்டமைப்புநெறிகள்
....................

தமிழில் /ஆங்கிலத்தில் கட்டுரைத் தலைப்பு
 
தமிழ் / ஆங்கிலம் பெயர்

ஆங்கிலம் / தமிழ் - ஆய்வுச் சுருக்கம்

திறவுச் சொற்கள்

Citation: கென்னடி ஜீ., (May 2021), “டோனி மொரிசனின் நாவல்களில் தலைமுறையினருக்கு இடையேயான முரண்பாடு (Generational Conflict in Toni Morrison’s Novels)”, IIETS (Inam: International E-Journal of Tamil Studies) (ISSN:2455-0531), Vol.7, Issue 27, pp.. (என அமைதல் வேண்டும்)

இதன் பின்பு கட்டுரை தொடங்கலாம்....

மதிப்பீட்டு முறையும் வெளியீடும்
..............................
இதுதான் முதல் மதிப்பீடாக இருக்கும்

அடுத்த மதிப்பீடு புதியவற்றை முன்வைக்கிறதா என்பது

இறுதி மதிப்பீடு துறைசார் வல்லுநரிடம்

பின்பு கட்டுரை மெய்ப்பாக்கம்

இறுதியில் இணையத்தில் வெளிவரும்.

ஞாயிறு, 11 ஆகஸ்ட், 2019

இனம்: பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் (மலர் - 5, இதழ் - 17)

இனம்: பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் ஐந்தாம் ஆண்டில் தடம் பதிக்கிறது.
பல்வேறு மாற்றங்களுடன் பதினேழாம் பதிப்பை வெளிக்கொணர்ந்துள்ளது. இப்பதிப்பில் இடம்பெறும் கட்டுரைகளின் பட்டியல் வருமாறு:

திங்கள், 25 ஜூன், 2018

யாப்பியலும் கணக்கியலும்

இலக்கணச் செம்மை மிக்க மொழியாகத் தமிழ் விளங்குகின்றது. இதன் மரபிலக்கணங்கள் செய்யுளாக்கம் குறித்துத் தனிச்சிறப்பாகப் பேசியுள்ளன. குறிப்பாகத் தொல்காப்பியத்தில் செய்யுளியல் என்பதே அளவில் பெரிய பிரிவாகும். இவ்வியலுள் பாடுபொருளும் யாப்பும் இயைபுடன் விளக்கப்பட்டுள்ளன. இதற்குப் பின்னர்  எழுந்த இலக்கண நூல்கள், பாடுபொருளிலிருந்து யாப்பிலக்கணத்தை மட்டும் பிரித்துத் தனியாக இலக்கணம் வகுத்துள்ளன. இவ்விரு நிலைகளிலும் யாப்புறுப்புகளைத் தொகைவகை செய்தும் உறழ்ந்தும் காட்டும் முறைமைகள் கையாளப்பட்டுள்ளன. இவற்றுள் கணக்கியல் எவ்வாறு பயன்பட்டுள்ளது என்பதை விளக்குவதாக இக்கட்டுரை அமைகின்றது.
பொதுவாக, மொழியை (அ) செய்யுளை ஆராயப் புகும் இலக்கணம் என்பது ஓர் அறிவியல் துறையாகும். அதன் அடிப்படையில் பிற அறிவியல் துறைகளைப் போல யாப்பியலிலும் கணக்கியல் பயன்படுத்தப்பட்டிருப்பது தவிர்க்க இயலாதது.
தமிழில் நவீன உரைநடை பத்தொன்பதாம் நூற்றாண்டிற்குப் பின்னரே வளரத் தொடங்கியது. அதுவரை அனைத்துத் துறைசார்ந்த கருத்துகளும் செய்யுள் வடிவத்தில் தாம் எழுதப்பட்டு வந்தன. அப்பொழுது தமிழர்கள் உரைநடையைவிடச் செய்யுட்களைக் குறுகிய நேரத்திற்குள் பாடி முடித்துவிடும் பழக்கத்தில் இருந்துள்ளனர். தமிழில் கணக்கினை அடிப்படையாகக் கொண்டு கணக்கதிகாரம், வானியல் நூல்கள் முதலானவை எழுதப்பட்டுள்ளன. இங்கு அவை குறித்துப் பேசாமல் யாப்பிலக்கணத்தில் கணக்கியலின் பயன்பாடு குறித்து மட்டும் சுருக்கமாகச் சுட்டப்படுகின்றது.
https://www.inamtamil.com/yappiyalum-ka%E1%B9%87akkiyalum/

சொல் நிலம்: வெளிப்பாட்டுத் திறனுரை

எந்த ஒரு படைப்பாளியும்ஒரு படைப்பில் அடைய வேண்டிய உச்ச நிலையை நோக்கியதேடலில் ஈடுபடாமல் இருக்க இயலாதுஅத்தகைய அவர்களின் தேடல்கள்பிற படைப்பாளியைப்பற்றிக் கூறுகிற கூற்றுக்கள்இலக்கியம் பற்றிய ஆழமான கணிப்புக்களாக அமைந்துகிடக்கின்றன என்று .பஞ்சாங்கம் (2011:43) படைப்பாளனையும் படைப்பையும் நிறுத்துப் பார்க்கிறார்அவ்வகையான படைப்பாகச் சொல் நிலம் அமைந்திருக்கிறதுஇருப்பினும் சிற்சில முரண்களும்பிழைகளும் இல்லாமல் இல்லைஇது எந்தவொரு படைப்பும் முழுமையாகவோ பிழையற்ற தன்மையுடையதாகவோ அமைந்துவிடாது என்பதைக் காட்டுகிறதுதொடக்கக்கால இலக்கியங்களையும் இலக்கணங்களையும் இவ்வரிசையில் நிறுத்திப் பார்க்கமுடியும்அதனைக் கருத்தில் கொண்டு சொல் நிலம் எனும் கவிதைத் தொகுப்பின் வெளிப்பாட்டுத் திறனைப் பார்க்க முயலுகிறது இவ்வெழுத்துரை.

சீனாவின் முத்துமாலைத் திட்டத்தினால் (ONE BELT ONE ROAD) இலங்கையில் ஏற்படும் விளைவுகள் – பொருளியல் நோக்கு

இந்துமகாசமுத்திரத் தீவில் தன்னிறைவு கொண்ட அரசாட்சியின்வழி நடைபோட்டுக் கொண்டிருக்கும் இலங்கை அரசின் நோக்கம் என்னவாக இருக்க வேண்டும்? சிறந்த திட்டமிடல்களுடன் கூடிய செயற்றிட்டங்களை நாட்டு மக்களுக்கும் எதிர்கால சந்ததிக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் பேண்தகு அபிவிருத்தியினை இலக்காகக் கொண்டு பயணிக்க வேண்டும் என்பதேயாகும். இலங்கை நாடானது 1948 ஆம் ஆண்டு சுதந்திரம் அடைவதற்கு முன்னர் அந்நிய நாட்டவரின் கைக்குள் சொல்பேச்சுக் குழந்தையாகிச் சிக்கித் தவித்தது. அத்தகைய அடிமைத்தனத்தில் இருந்து பல போராட்டங்களுக்கு மத்தியில் மீண்டும் என்ன பயன்? இன்று சர்வதேச வர்த்தகம், அபிவிருத்தி என்னும் பெயரில் உலக நாடுகளின் சதிவலைகளில் இலங்கையும் வீழ்ந்திருக்கிறது.

வாழ்வியலறம் + பாலியலறிவு = பண்டைத்தமிழர்

இன்றைய தமிழ்ச் சமூகத்தளத்தில் ‘பாலியல்’ என்பது ஒரு தீண்டத்தகாத சொல். அதனால்தான் சில முக்கியமான தமிழ் அகராதிகளில் கூட (அபிதான சிந்தாமணி, நா.கதிரைவேற்பிள்ளையின் தமிழ்மொழி அகராதி, கழகத் தமிழ்க் கையகராதி) இச்சொல் காணப்பெறவில்லை. ஆனால், இச்சொல் ஒரு தெளிவான பொருளுடையது. இருப்பினும், இது தீண்டத்தகாத, கெட்ட வார்த்தையாக மாறியது எப்போது? என்ற வினா ஆய்ந்து சிந்தித்தற்குரியது.
பாலியல் = பால் + இயல். இச்சொல் ஒவ்வொரு பாலுக்குமான (ஆண்பால், பெண்பால்) இயல்பைக் குறிக்கக்  கூடியது என்று இதற்குப் பொருள் குறிக்கலாம். உயிரினங்களின் இயல்புகள் குறித்து நோக்கினால், அவற்றின் முக்கிய இயல்பாகக் கருதப்பெறுவது இனப்பெருக்கமாகும். இந்த இனப்பெருகத்திற்குப் பாலியலறிவு கட்டாயம் தேவை. இந்த அளவிற்கு முக்கியமான சொல்லைத் தீண்டத்தகாத சொல்லாக மாற்றியது நம் அறியாமையன்றி வேறென்ன?

செவ்வாய், 27 பிப்ரவரி, 2018

மலைபடுகடாம் சுட்டும் நன்னன்சேய் நன்னனின் நாட்டுவளம்

பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்றான மலைபடுகடாம் 583 பாடலடிகள் கொண்டதொரு நூல். இந்நூலின் மற்றொரு பெயர் கூத்தராற்றுப்படை. இந்நூலைப் பாடியவர் இரணியமுட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார். இந்நூலின் பாட்டுடைத்தலைவன் செங்கண் மாத்துவேள் நன்னன்சேய் நன்னன் ஆவான். இந்நூலில் செங்கண்மா, பல்குன்றக் கோட்டம், நவிரமலை, சேயாறு ஆகிய வாழிடங்கள் முதன்மையாகச் சுட்டப்பெற்றுள்ளன. இந்நிலப்பரப்புகள் தொண்டைநாட்டு நிலப்பரப்புகளாகும். இந்நாட்டின் வளங்களை மலைபடுகடாத்தின்வழி அறிமுகநிலையில் அடையாளப்படுத்துவனை நோக்கமாகக் கொண்டது இக்கட்டுரை.

சங்ககால மக்களின் வாழ்வியலில் மனிதம்

மனிதம் மண்ணுலத்தில் இருப்பதால் இன்னும் உலகம் எழிலாகவும் வளமாகவும் இருக்கிறது. மனித செயல்பாடுகளில் ஒரு மனிதன் மற்றொரு மனிதன் மேல் காட்டும் அன்பு தான் மனிதம் எனலாம். ‘அன்பின் வழியது உயிர்நிலை’ என்று வள்ளுவர் மிகச் சரியாகக் கணிக்கிறார். சங்ககால இலக்கியமான பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும் வெளிப்படுத்தும் மனிதப்பண்புகளை இனங்கண்டு வெளிப்படுத்துகின்றது இக்கட்டுரை.

தமிழில் வட்டார வழக்குச் சொல்லகராதிகள் உருவாக்கம்

ஒரு மொழி பன்னெடுங்காலமாகப் பலரால் பேசப்படும் நிலையில் வட்டாரம், சமூகம் சார்ந்து மொழிக்குள் வேறுபாடுகள் சில அமைவதுண்டு. ஒரு மொழியில் ஏற்படும்  இத்தகைய வழக்கு வேறுபாடுகள் கிளைமொழிகள் எனப்படுகின்றன. வட்டாரம், சமூகம், இனம், பால், வயது முதலியவற்றின் அடிப்படையில் ஒரு மொழியில் கிளைமொழிகள் அமைவதை மொழியியல் அறிஞர்கள் விளக்கியுள்ளனர். தமிழ்ச்சூழலில் வட்டாரம், சமூகம் சார்ந்த கிளைமொழிகள் தெளிவாக அமைந்துள்ளன. அதாவது, சென்னையில் பேசப்படும் தமிழுக்கும் நாஞ்சில் நாட்டில் பேசப்படும் தமிழுக்கும் காவிரி டெல்டா பகுதியில் பேசப்படும் தமிழுக்கும் கொங்கு தமிழுக்கும் வேறுபாடுகள் உள்ளன. இத்தகைய வேறுபாடுகளை அடிப்படையாகக் கொண்டு கிளைமொழி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

குறுந்தொகைத் திறனுரைகள் – நூல் மதிப்பீடு

செவ்விலக்கிய நூல்களுள் ஒன்றாகிய குறுந்தொகைக்குப் பல பதிப்புக்களும் உரைகளும் வெளிவந்துள்ளன. அதேபோல் பத்தொன்பதாம் நூற்றாண்டு தொடங்கி இருப்பத்தோராம் நூற்றாண்டு வரையிலும் அந்நூல் குறித்துக் கட்டுரைகளும், நூல்களும் பல எழுதப்பட்டுள்ளன. நூல்களின் அமைப்பு நிலைகளுக்கேற்ப அவற்றினை அறிமுக நூல்களாகவும், விளக்கவியல் நூல்களாகவும், இரசனைசார் நூல்களாகவும், திறனாய்வு நூல்களாகவும் வகைப்படுத்தலாம். அவ்வகையில்  ஆ.மணி என்பவர் ‘குறுந்தொகைத் திறனுரைகள்’ எனும் நூல் ஒன்றை எழுதி வெளியிட்டுள்ளார். அது எவ்வகை நூல் என்பதனை அறிமுகப்படுத்தி, மதிப்பீடு செய்வது இக்கட்டுரையின் நோக்கமாகும்.

தமிழ்க் காப்பு இயத்தின் புதிய வினைக் கோட்பாடு உருவாக்கமும் கட்டமைப்பும்

தொல்காப்பியம்வீரசோழியம்நேமிநாதம்நன்னூல்இலக்கண விளக்கம்தொன்னூல் விளக்கம்முத்துவீரியம்சுவாமிநாதம்அறுவகை இலக்கணம்தமிழ்நூல்தென்னூல் ஆகிய இலக்கண நூல்கள் எல்லாம் தத்தமது இலக்கணக் கோட்பாடுகளைக் காலமாற்றம்வளர்ச்சி என்பவற்றின் அடிப்படையில் கட்டமைத்துச் செல்வதோடுதொல்காப்பியத்தையோநன்னூலையோ பின்பற்றி இலக்கணம் வகுத்துள்ளனமார்த்தாண்டம்நந்தன்காடு என்ற பகுதியிலுள்ள மீ.காசுமான் என்பவர் எழுதிய தற்கால இலக்கண நூலான தமிழ்க் காப்பு இயத்தின் வினைக் கோட்பாட்டு உருவாக்கத்தினையும் கட்டமைப்பினையும் எடுத்துரைப்பதாக இக்கட்டுரை அமைகின்றது.

மலைபடுகடாம் சுட்டும் நன்னன்சேய் நன்னனின் நாட்டுவளம்

பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்றான மலைபடுகடாம் 583 பாடலடிகள் கொண்டதொரு நூல். இந்நூலின் மற்றொரு பெயர் கூத்தராற்றுப்படை. இந்நூலைப் பாடியவர் இரணியமுட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார். இந்நூலின் பாட்டுடைத்தலைவன் செங்கண் மாத்துவேள் நன்னன்சேய் நன்னன் ஆவான். இந்நூலில் செங்கண்மா, பல்குன்றக் கோட்டம், நவிரமலை, சேயாறு ஆகிய வாழிடங்கள் முதன்மையாகச் சுட்டப்பெற்றுள்ளன. இந்நிலப்பரப்புகள் தொண்டைநாட்டு நிலப்பரப்புகளாகும். இந்நாட்டின் வளங்களை மலைபடுகடாத்தின்வழி அறிமுகநிலையில் அடையாளப்படுத்துவனை நோக்கமாகக் கொண்டது இக்கட்டுரை.

சசூரின் மொழியியல் ரீதியான அமைப்பியலும் பின்அமைப்பியலும்

ஆய்வு அறிமுகம்
மெய்யியலில் முக்கிய எண்ணக்கருவாக ஆராயப்படுவது அமைப்பியல்வாதம். இது சமூகத்தில் காணப்படக்கூடிய பல விடயங்களை ஒன்றாக இணைத்து ஒரு சிக்கலான அமைப்பை விளங்கிக் கொள்வதற்கு முயலும் ஒரு அறிவியல் சார்ந்த அணுகுமுறையாகும். இவ் அணுகுமுறையின் முன்னோடியாக சுவிட்ஸ்சர்லாந்து மொழியியலாளர் சசூர் (Ferdinand.De.Saussure) விளங்குகின்றார். இவரே மொழிக் கட்டமைப்பு ரீதியான ஆய்வினை முதன்முதலில் நிகழ்த்தியவராவார்.
அமைப்பியல்வாத சிந்தனையாளர்களாகத் தம்மை அடையாளப்படுத்திக் கொள்ளும் ரோலன் பாத் (Roland Barthes), லூயிஸ் அல்தூசர் (Louis Althusser), பூக்கோ (Faucault), லகான் (Lacan), லெவிஸ்ட்ராஸ் Levi strauss போன்றோர் சசூரின் மொழிக் கட்டமைப்புக்கள் கருத்துருவ மாதிரிகளைக் கொண்டு மொழியின் மேலோட்டமான நிகழ்வுகளை (Parole), அதற்கு அடிப்படையாகவுள்ள முறைமையினை(Langue) குறியீடுகளைக் கொண்டு ஆராய்கின்ற விஞ்ஞானத்தை (Semiology) முழு வளர்ச்சியடையச் செய்தனர்.

பதிற்றுப்பத்தில் உழவும் உழவரும்

‘உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்’ என்ற பாரதியாரின் கவிதை வரிகளுக்கு இணங்க உழவைப் போற்றி வளர்த்த நாடு தமிழ்நாடு. சங்கநூல்களுள் ஒன்றான பதிற்றுப்பத்து சேர அரசர்களைப் பற்றியது என்றாலும் வீரம் சார்ந்தது என்றாலும் உழவு சார்ந்த வேளாண்மைக் கருத்துக்களை அதிகம் கொண்டுள்ளது. பதிற்றுப்பத்தில் நான்கில் ஒரு பங்கு உழவைப் பற்றி மட்டுமே கூறுகிறது. பதிற்றுப்பத்தில் இடம்பெற்றுள்ள உழவு குறித்தும், உழவர் குறித்தும் எடுத்துரைப்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும். உழத்திப்பாட்டு, பள்ளு, ஏர் பரணி, ஏர் எழுபது (எண் செய்யுள்) திருக்கை வழக்கம், நெல் விடு தூது முதலான உழவை மையமிட்ட சிற்றிலக்கியங்களுக்கான வேர் சங்க இலக்கியத்தில் இருந்துதான் வந்திருக்க முடியும்.

அகநானூறு சுட்டும் மருதநிலச் சிறப்பு

சங்க இலக்கிய நூல்களுள் அகச் செய்திகளைக் கூறும் நூல்களில் ஒன்று அகநானூறு. மருதத்திணையின் உரிப்பொருளாக ஊடலைச் சுட்டுகின்றார் தொல்காப்பியர். மருதம், வயலும் வயல் சார்ந்த பகுதி என்று குறிப்பிடப்படுகின்றது. அவ்வகையில், அகநானூறு – மருதத்திணைப் பாடல்கள் சுட்டும் வயல்வெளிக் காட்சிகளை அடையாளப்படுத்துவது இக்கட்டுரையின் நோக்கமாகும்.
வயலின் சிறப்புகள்
ஒவ்வொரு மனிதனுக்கும் வயல் பகுதி உணவளிக்கும் அமுதசுரபியாகும். மாதம் மும்மாரி மழைபொழிந்து, முப்போகம் நெல்விளைந்து ஏழை எளியோரின் வயிற்றினை நிரப்பும் வயல் பகுதியானது கொடைத்தன்மை பெற்றதாகும்.
வயல் என்பதற்கு “கழனி, மருதநிலம், வெளி” என்று கழகத் தமிழ் அகராதி பொருள் கூறுகின்றது.

நாட்டுப்புறப் பாடல்களின் வளர்ச்சிப் படிநிலைகள்

தகவலைப் பலதரப்பட்ட மக்களுக்கும் எடுத்துச் செல்லப் பயன்படும் கருவியே ஊடகமாகும்.  ‘ஊடகம்’ என்ற சொல்லும், ஊடகங்களும் தோன்றும் முன்னே தகவல் பரிமாற்றப் பணியினை நாட்டுப்புறக் கலைகள் செய்துவந்தன என்றால் அது மிகையாகாது.
சமிக்ஞைகளும் சப்தங்களும் மெருகூட்டப்பட்டு, செம்மையாக்கப்பட்டு, நாட்டுப்புறப் பாடலாகவும், கதைகூறல்களாகவும், கதைப்பாடல்களாகவும், நாடகங்களாகவும் உருப்பெற்றன.  இதன்வழி தன் எண்ணங்களையும், நிகழ்வுகளையும், செய்திகளையும் ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொண்டனர்.  பிற்காலத்தில் இதனை நாட்டுப்புற ஊடகங்கள் என்றும் அழைத்து வந்தனர்.  இவையே நவீன ஒலி, ஒளி ஊடகங்களின் தோற்றுவாய் எனலாம்.
இவ்வாறாக ஊடகங்கள் தோன்றுவதற்குக் காரணமாக இருந்த நாட்டுப்புறக் கலைவடிவில் ஒன்றாகிய நாட்டுப்புறப்பாடல்கள் ஊடகங்களில் பங்கு பெறும் விதம் பற்றி ஆய்ந்துரைப்பதே இக்கட்டுரையின் நோக்கம்.

ஐங்குறுநூறு – மருதத்திணைப் பாடல்கள் வெளிப்படுத்தும் தலைவன் தலைவியின் உளநிலை

ஐங்குறுநூற்றில் மருதத்திணையைப் பாடிய புலவர் ஓரம்போகியார். இவர் ஆதன்அவினி என்னும் சேர மன்னனைப் புகழ்ந்து, மருதத்தில் அமைந்த நூறு பாட்டுக்களைப் பத்துப்பத்தாகப் பகுத்துப் பாடியுள்ளார். அவை, ‘வேட்கைப்பத்து’ முதலாக எருமைப்பத்து ஈறாக அமைகின்றன. இத்தகு பாடல்களில் வெளிப்படும் தலைவன் – தலைவியின் உளநிலையை அடையாளப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது இக்கட்டுரை.
தன் தவற்றை உணர்ந்த தலைவன்
தலைவன் பரத்தையோடு நெடுநாள் பழகி வந்தான். அதை அறிந்த தலைவி மனம்வருந்தி உடல் மெலிந்தாள். தான் செய்த தவற்றை உணர்ந்த தலைவன் மீண்டும் தன் தலைவியோடு வாழவேண்டுமென வந்து சேர்ந்தான். பின் தோழியிடம் நான் பரத்தையோடு வாழ்ந்த காலங்களில் நீங்கள் என்னைப் பற்றி என்ன நினைத்தீர்கள் என்றான். அதை அறிந்த தோழி காஞ்சிப் பூவோடு சினையுடைய மீன் எப்படி இருக்கும் அதுபோல் உயர்ந்த குடியில் பிறந்த தலைவி உன்னைத் தாழ்வாகக் கருதினாள் என்றாள், https://www.inamtamil.com/ai%E1%B9%85ku%E1%B9%9Funu%E1%B9%9Fu-marutatti%E1%B9%87aip-pa%E1%B9%ADalka%E1%B8%B7-ve%E1%B8%B7ippa%E1%B9%ADuttum-talaiva%E1%B9%89-talaiviyi%E1%B9%89-u%E1%B8%B7anilai/

ஒச்சாவும் ஒத்தக்காது ஆடும் (நூலறிமுகம்)

நூல் : ஒச்சாவும் ஒத்தக்காது ஆடும்ஆசிரியர் : மதுரை பாலன்பதிப்பு : ஓவியா பதிப்பகம், திண்டுக்கல், பதிப்பாண்டு : 2015(முதற்பதிப்பு), விலை : உரூபாய்120/-
மதுரை பாலன் – அறிமுகம்
இவர் மதுரை மாவட்டம் திருமங்கலம் வட்டத்தில் நேசனேரி கிராமத்தில் 10.06.1954 இல் இருளப்பன், தீத்தம்மாள் தம்பதியினருக்குப் பிறந்தார். இவர் என் காதல் கண்மணி திரைப்படத்திற்குத் திரைக்கதை வசனம் எழுதியதன் மூலம் திரைத்துறைப் படைப்பாளராக அறிமுகமானார். முப்பத்தைந்து ஆண்டுகளாக வீதி நாடகங்கள் நிகழ்த்தி வருகிறார். இவரின் ‘முருக விஜயம்’ இன்றளவும் நாடக உலகினரால் கொண்டாடப்படும் நாடகமாகத் திகழ்கின்றது. மேலும், வழக்காடு மன்றம், இலக்கிய நிகழ்வுகள் மற்றும் சின்னத்திரையிலும் தனது தடத்தினை நீட்டிக்கொண்டே சென்று கொண்டிருக்கிறார்.

ஆய்வாளர் அணுக வேண்டிய கருவி நூல்கள்

காலந்தோறும் பல்வேறு அணுகுமுறைகளைப் பின்பற்றி இலக்கியங்களை ஆய்வு செய்யும் வேளையில், அடுத்த தலைமுறை ஆய்வாளர்க்கும் மாணாக்கர்க்கும் ஆய்வில் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகளை, காணவேண்டிய நுட்பங்களைக் குறித்து அறிவுறுத்திச் செல்ல வேண்டியதும் தேவையான ஒன்றாகின்றது. அவ்வகையில், பழந்தமிழிலக்கிய ஆய்வு மேற்கொள்ளும் ஆய்வாளர்கள் கவனத்திற் கொள்ள வேண்டிய சில குறிப்புகளை முன்வைப்பதாக இவ்வுரை அமைகின்றது.
(இக்கட்டுரையைப் படங்களுடன் வாசிக்க கையாவண நூல் (PDF) பார்க்கவும்)

நுண்கடன் திட்டங்களினால் ஏற்படும் விளைவுகள்

அறிமுகம்
பண்டமாற்றுப் பொருளாதார முறைமைக்குள் முடங்கிக் கிடந்த பொருளாதாரச் செயற்பாடுகள், பணப்பரிவர்த்தனை பொருளாதார உருவாக்கத்தின் பின்னர் ஒரு புதிய உத்வேகத்தில் வீறுநடை போடத் தொடங்கிவிட்டன. இன்றைய காலகட்டத்தில் ஒவ்வொரு சமூகமுமே பலவகையான சமூகப் பிரச்சினைகளுடன் பின்னிப் பிணைந்திருக்கிறது. சமூகத்தில் ஏற்படுகின்ற மாற்றங்கள் முன்னேற்றகரமானதாகவோ அல்லது பின்னடைவானதாகவோ காணப்படுகின்றன. அந்த வகையில் சமூகத்தினது முன்னேற்றத்தினை அடிப்படையாகக் கொண்டு எழுகின்ற மாற்றங்கள் சிலவேளைகளில் பல தாக்க விளைவுகளினை ஏற்படுத்தக்கூடும்.