வாசிப்பை நேசி! லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வாசிப்பை நேசி! லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 24 ஜூன், 2015

வாசிப்பை நேசி!



கோவை, இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியின் மொழித்துறை, நூலகம் மற்றும் கோவை விஜயா பதிப்பகமும் இணைந்து நடத்திய ‘வாசிப்புத் திருநாள்’ நிகழ்வு கல்லூரி நூலகத்தில் 23.06.2015 காலை 10.00 மணியளவில் நடைபெற்றது.
            இந்நிகழ்வினை மொழித்துறைத் தலைவர் திரு.த.திலிப்குமார் அவர்கள் வாசித்தலே நம்மின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும்; உங்களை உங்களுக்கு அறிமுகப்படுத்தும் என நூல் பற்றிய புரிதலை அறிமுகப்படுத்தினார். தொடர்ந்து கல்லூரி முதல்வர் முனைவர் நா.பாலுசாமி அவர்கள் விழாவிற்குத் தலைமையேற்றுத் தலைமையுரையாற்றுகையில்; சுவாசிக்க மறந்தாலும் வாசிக்க மறவாதீர்! என நூல்வாசிப்பின் முக்கியத்துவத்தை மாணவர்களின் மனதில் ஆழப் பதித்து, இது போன்ற நிகழ்வுகள் தொடர்ந்து நிகழ வேண்டும் என்றார்.