இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 29 ஜனவரி, 2015

செம்மொழித் தேசியக் கருத்தரங்கம் - சங்க இலக்கியம் ஓர் அறிமுகம்


இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி
கோவை - 641 028

     சென்னை, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனமும், கோவை, இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறையும் இணைந்து சங்க இலக்கியம் ஓர் அறிமுகம் என்னும் தலைப்பிலமைந்த தேசியக் கருத்தினை 29.01.2015 இன்று தொடங்கியது. மேலும் இக்கருத்தரங்கம் 30.01.2015, 31.01.2015 ஆகிய இரண்டு நாட்களுக்கு  நடைபெறும்.

          இவ்விழாவிற்குக் கல்லூரி முதல்வர் முனைவர் நா.பாலுசாமி முன்னிலை வகித்தார்.

          தொடர்ந்து கோவை, பேரூர் தவத்திரு. சாந்தலிங்க அடிகளார் கலை அறிவியல் தமிழ்க் கல்லூரியின் முதல்வர் முனைவர் தவத்திரு. மருதாசல அழகளார் அவர்கள் விழாவிற்குத் தலைமையேற்றுத் தலைமையுரையாற்றுகையில் ஒவ்வொரு இடங்களில் நடைபெறும் கருத்தரங்கங்கள் இலக்கியங்களில் ஆழமாகச் செல்லும். இப்படி இலக்கியங்களை அறிமுகப்படுத்துவதுபோல் அமைந்தால் தான் மாணவர்களுக்குப் பயனுள்ளதாக அமையும். அந்த வகையில்  சங்க இலக்கியம் ஓர் அறிமுகம் என்ற இக்கருத்தரங்கத்தின் தலைப்பை இன்றைய மாணவர்களுக்குப் பொருத்தமானதாக அமைவதோடு மற்ற கல்லூரிகளுக்கும் வழிகாட்டுதலாக அமைந்துள்ளது பாராட்டத்தக்கது. மேலும் சங்க இலக்கியங்கள் எவை எவை என்பது பற்றி எடுத்துரைத்து அவை மக்களின் வாழ்வியல் அங்கமாக விளங்கிவருவதையும் எடுத்துரைத்தார்.