செவ்வாய், 27 பிப்ரவரி, 2018

ஐங்குறுநூறு – மருதத்திணைப் பாடல்கள் வெளிப்படுத்தும் தலைவன் தலைவியின் உளநிலை

ஐங்குறுநூற்றில் மருதத்திணையைப் பாடிய புலவர் ஓரம்போகியார். இவர் ஆதன்அவினி என்னும் சேர மன்னனைப் புகழ்ந்து, மருதத்தில் அமைந்த நூறு பாட்டுக்களைப் பத்துப்பத்தாகப் பகுத்துப் பாடியுள்ளார். அவை, ‘வேட்கைப்பத்து’ முதலாக எருமைப்பத்து ஈறாக அமைகின்றன. இத்தகு பாடல்களில் வெளிப்படும் தலைவன் – தலைவியின் உளநிலையை அடையாளப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது இக்கட்டுரை.
தன் தவற்றை உணர்ந்த தலைவன்
தலைவன் பரத்தையோடு நெடுநாள் பழகி வந்தான். அதை அறிந்த தலைவி மனம்வருந்தி உடல் மெலிந்தாள். தான் செய்த தவற்றை உணர்ந்த தலைவன் மீண்டும் தன் தலைவியோடு வாழவேண்டுமென வந்து சேர்ந்தான். பின் தோழியிடம் நான் பரத்தையோடு வாழ்ந்த காலங்களில் நீங்கள் என்னைப் பற்றி என்ன நினைத்தீர்கள் என்றான். அதை அறிந்த தோழி காஞ்சிப் பூவோடு சினையுடைய மீன் எப்படி இருக்கும் அதுபோல் உயர்ந்த குடியில் பிறந்த தலைவி உன்னைத் தாழ்வாகக் கருதினாள் என்றாள், https://www.inamtamil.com/ai%E1%B9%85ku%E1%B9%9Funu%E1%B9%9Fu-marutatti%E1%B9%87aip-pa%E1%B9%ADalka%E1%B8%B7-ve%E1%B8%B7ippa%E1%B9%ADuttum-talaiva%E1%B9%89-talaiviyi%E1%B9%89-u%E1%B8%B7anilai/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன