செவ்வாய், 27 பிப்ரவரி, 2018

சங்ககால மக்களின் வாழ்வியலில் மனிதம்

மனிதம் மண்ணுலத்தில் இருப்பதால் இன்னும் உலகம் எழிலாகவும் வளமாகவும் இருக்கிறது. மனித செயல்பாடுகளில் ஒரு மனிதன் மற்றொரு மனிதன் மேல் காட்டும் அன்பு தான் மனிதம் எனலாம். ‘அன்பின் வழியது உயிர்நிலை’ என்று வள்ளுவர் மிகச் சரியாகக் கணிக்கிறார். சங்ககால இலக்கியமான பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும் வெளிப்படுத்தும் மனிதப்பண்புகளை இனங்கண்டு வெளிப்படுத்துகின்றது இக்கட்டுரை.

மனிதம் – சொல் விளக்கம்
“மனம் என்ற சொல்லின் அடியிலிருந்தே மனிதம் என்ற சொல்லும் தோன்றியிருக்க வேண்டும். மனத்தை உடையவன் மனிதன் என்றிருந்தது பின்பு மனிதம் என்றாகியிருக்கலாம். அதுவே முதல் நீண்டு மானிடம் என்று ஆகியிருத்தல் வேண்டும்” என்று கரு.நாகராசன் ‘தமிழர் கண்ட மனம்’ நூலில் கூறியதை சி. இராசவேந்திரன் வழிமொழிகிறார். மனிதன் என்ற சொல் மனிதம் ஆக மாறிய மனிதநேயத்தைக் குறிக்கிறது என்பார். (சி.இராசவேந்திரன், பெரியபுராணத்தில் மனிதநேயச் சிந்தனை, ப.58)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன