செவ்வாய், 27 பிப்ரவரி, 2018

மலைபடுகடாம் சுட்டும் நன்னன்சேய் நன்னனின் நாட்டுவளம்

பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்றான மலைபடுகடாம் 583 பாடலடிகள் கொண்டதொரு நூல். இந்நூலின் மற்றொரு பெயர் கூத்தராற்றுப்படை. இந்நூலைப் பாடியவர் இரணியமுட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார். இந்நூலின் பாட்டுடைத்தலைவன் செங்கண் மாத்துவேள் நன்னன்சேய் நன்னன் ஆவான். இந்நூலில் செங்கண்மா, பல்குன்றக் கோட்டம், நவிரமலை, சேயாறு ஆகிய வாழிடங்கள் முதன்மையாகச் சுட்டப்பெற்றுள்ளன. இந்நிலப்பரப்புகள் தொண்டைநாட்டு நிலப்பரப்புகளாகும். இந்நாட்டின் வளங்களை மலைபடுகடாத்தின்வழி அறிமுகநிலையில் அடையாளப்படுத்துவனை நோக்கமாகக் கொண்டது இக்கட்டுரை.

அரசனைத் தேடிச் செல்லும் கூத்தர்கள்
நன்னன்சேய் நன்னனிடம் பரிசில் பெற்ற கூத்தர் கூட்டத்துள் ஒருவன், வறுமையில் வாடும் பிறிதொரு கூத்தர்கூட்டத் தலைவனிடம் நன்னனின் வள்ளல்தன்மையைக் கூறி, அவனிடம் ஆற்றுப்படுத்துவதனை மையநோக்கமாகக் கொண்டதே இந்நூல். நன்னனின் நவிரமலையை அடைவதற்கான வழிகள் குறித்து நூல்முழுமையும் விதந்து பேசப்பட்டிருக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன