வியாழன், 28 ஆகஸ்ட், 2014

வெள்ளி, 15 ஆகஸ்ட், 2014

முத்துவீரியம் – பாலவியாகரண எழுத்தறிமுகம்


திராவிடமொழி இலக்கணக் கலைஞர்களுள் தமிழ், தெலுங்கு ஆயிரு மொழி இலக்கணக் கலைஞர்களே தத்தம் மொழிக்குரிய எழுத்துக்களை நூலின் தொடக்கத்தில் அறிமுகப்படுத்தும் பாங்கைக் கொண்டுள்ளனர். இப்பாங்கைப் பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த முத்துவீரிய உபாத்தியாயரிடத்தும் (தமிழ் – முத்துவீரியம்), சின்னயசூரியிடத்தும் (தெலுங்கு – பாலவியாகரணம்) காணமுடிகின்றது. அவ்விருமொழி இலக்கணக் கலைஞர்களும் எவ்வாறு தத்தம் மொழிக்குரிய எழுத்துக்களை அறிமுகம் செய்வதில் வேறுபடுகின்றனர் என்பதைச் சுட்டிக் காட்டுகின்றது இக்கட்டுரை.