வியாழன், 25 டிசம்பர், 2014

தமிழும் அதன் இலக்கண நூல்களும்


முனைவர் த. சத்தியராஜ் (நேயக்கோ)
தமிழ் - உதவிப் பேராசிரியர்
இந்துசுதான் கலை & கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர்
9600370671

தமிழ் தமிழர்களினது தாய்மொழியாம். இது திராவிட மொழிக் குடும்பத்தின் முதன்மையானது. ம்மொழி இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் அதிக அளவிலும், ஐக்கிய அரபு அமீரகம், தென்னாப்பிரிக்கா, மொரிசியசு, பிசி, ரீயூனியன், திரினிடாட்டு போன்ற நாடுகளில் குறைவாகவும் பேசப்படுகிறது.
தமிழ், இந்தியாவில் பேசப்படும் மொழிகளில் மிக நீண்ட இலக்கிய, இலக்கண மரபுகளைக் கொண்டது. தமிழ் இலக்கியங்களில் சில இரண்டாயிரம் ஆண்டுகளுக்குமேல் பழமையானவை. கண்டெடுக்கப்பட்டுள்ள தமிழ் ஆக்கங்கள் கிறித்துவுக்கு முன் 300-ம் ஆண்டைச் சேர்ந்த பிராமி எழுத்துக்களில் எழுதப்பெற்றவைகளாகும். இந்தியாவில் ஏறத்தாழ ஓரிலக்கக் கல்வெட்டுகள் கிடைத்துள்ளன. தொல்லெழுத்துப் பதிவுகளில் அறுபதினாயிரத்திற்கும் அதிகமானவை தமிழகத்தில் கிடைத்துள்ளன. இதில் ஏறத்தாழ தொன்னூற்றைந்து விழுக்காடு தமிழில் உள்ளன. பிற மொழிகள் அனைத்தும் ஐந்து விழுக்காட்டுக்கும் குறைவான கல்வெட்டுகளையே கொண்டுள்ளன. பனையோலைகளில் எழுதப்பட்டு (திரும்பத் திரும்பப் படியெடுப்பதன் [பிரதி பண்ணுவது] மூலம்) அல்லது வாய்மொழி மூலம் வழிவழியாகப் பாதுகாக்கப்பட்டு வந்ததால், மிகப் பழைய ஆக்கங்களின் காலங்களைக் கணிப்பது மிகவும் கடினமாக உள்ளது. எனினும் மொழியியல் உட்சான்றுகள், மிகப் பழைய ஆக்கங்கள் கி. மு. 2ஆம் நூற்றாண்டுக்கும் கி. பி. 3ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் இயற்றப்பட்டிருக்கலாம் எனக் காட்டுகின்றன. இன்று கிடைக்கக்கூடிய மிகப் பழைய ஆக்கம் தொல்காப்பியம் ஆகும். இது பண்டைக்காலத் தமிழின் இலக்கணத்தை விளக்கும் ஒரு நூலாகும். இதன் சில பகுதிகள் கி. மு. 200ஆம் ஆண்டு காலத்தில் எழுதப்பட்டதாகக் கருதப்படுகின்றது. 2005-ல் அகழ்ந்தெடுக்கப்பட்ட சான்றுகள், தமிழ் எழுத்து மொழியைக் கி. மு. 500ஆம் ஆண்டிற்கும் முன் தள்ளியுள்ளன. இச்சிறப்புமிகு மொழியில் உள்ள இலக்கணங்களைப் பட்டியலாகத் தொகுத்துத் தருகின்றது இக்கட்டுரை.

வெள்ளி, 19 டிசம்பர், 2014

தொல்காப்பியம் (தமிழ்) – பாலவியாகரண (தெலுங்கு) ஒட்டுக்களின் உறவு


                                                                                         - முனைவர் த. சத்தியராஜ் (நேயக்கோ)
ட்டு என்பது ஓர் அடிச்சொல்லின் பின்னரோ அல்லது ஒரு முழுச் சொல்லின் பின்னரோ இணைந்து புதிய பொருளைத் தோற்றுவிப்பது அல்லது புதிய பொருள் ஏற்படுவதற்கு வித்திடுவது. காட்டாக, கவி+அர்=கவிஞர் என்பதைச் சுட்டலாம். இதனுள் கவி என்பது பாட்டு (Poem), பாவலன் (Poet), ஞானி (Sage), குரங்கு (Monkey) (2005:238) என்ற பொருண்மைகளுடைத்து. அச்சொல் ஓர் அடிச்சொல் வகைத்து. அச்சொல்லுடன் அர் எனும் பலர்பால் ஈறு ஒட்ட இடையில் ஞ் எனும் மெய் தோன்றி கவிஞர் எனும் புதியச் சொல்லையும் பொருளையும் தருகின்றது. அச்சொல் கவிதை எழுதும் ஆடவரையோ அல்லது பெண்டிரையோ குறிக்கும் பொதுச்சொல்லாயிற்று.
பொதுவாக, மொழியியலார் முன், பின், உள், மேல் ஆகிய ஒட்டுக்கள் இவ்வுலகில் வழங்கப்பெறும் மொழிகளில் காணப்படுகின்றன என்பர். இவற்றுள் முன்னொட்டு (Prefix) கொடைமொழிச் சொற்கள் கொள்மொழிக்குக் கடனாளப்படும் போது நிகழும் (காண்க: ராம: - இராமன்) தன்மையது. உள்ளொட்டு (Infix – அடிச்சொல்லின் உள்ளே நிகழும் மாற்றம். எ – டு. Kitāb) எகிப்து, அரபு மொழிகளிலும்; பின்னொட்டுத் (Suffix – வேர்ச்சொல்லுக்குப் பின்னர் வந்தமைவது. எ – டு. தந்த நிலம். இவற்றில் வரும் அம் பின்னொட்டு) தமிழிலும்; மேலொட்டு (Suprafix – முழுமையும் மேல்நிலை ஒலியன்களால் நிகழ்வது. எ – டு.  ma – tone) சீனமொழியிலும் காணப்படுகின்றன (2011: 265). இவ்வாறு பல்வகை ஒட்டுக்கள் உலகமொழிகளில் வழங்கினாலும், குறிப்பாகத் திராவிட மொழிகளில் பின்னொட்டே வழங்குகின்றன என்பது அறிஞர்களின் கருத்து. இதனை அவ்வம் மொழி இலக்கணங்கள் விளக்கியுள்ளமையிலிருந்து புரிந்து கொள்ளலாம். அதனைத் தமிழின் தொல்காப்பியத்திலும் தெலுங்கின் பாலவியாகரணத்திலும் காணலாம் என்பதை இக்கட்டுரை விளக்குகின்றது.

வியாழன், 13 நவம்பர், 2014

Gnana Sambandha Upaathiyaayar (20th Cent.)


Birth Place  : SuLipuram in ILa Naadu; was lived in Thirunelveli.

Father   :   Selvanaayaka Chettiyaar; Saivar

      He was a scholar of Arumuganaavalar; good at learning the works of Kanthapuranam; Periyapuranam and instructed it to others. Moreover, he was a great orator and poet.

Works  : Maa Nikka piLLaiyaar Thiruvarutpaa, Kathirkaamavelar Thiruvarutpaa, Unique songs (Thanip paadal).

Translated by :    R. Nithya Sathiyaraj
                
Source: Biographical Dictionary of Tamil Men of  Letters (Tamil)

சனி, 8 நவம்பர், 2014

ஒப்பியல் அடிப்படையில் மணஉறவுப் பெண்டிரின் அடுக்களைநிலை

                                                - முனைவர் த. சத்தியராஜ் (நேயக்கோ)

அகவாழ்க்கையைப் பெண்டிர் அடுக்களைகளிலே பெரிதும் கழிக்கின்றனர். அங்கு அவர்கள் அடையும் இன்னல்கள் அளப்பறியன. அவ்வின்னல்களைப் பொருட்படுத்தாது உணவு ஏற்பாடு செய்து தம் கணவரின் பசியைப் போக்கும் மாண்புடையவர்களாகவே விளங்குகின்றனர். அதனைத் தமிழில் குறுந்தொகையும் பிராகிருதத்தில் காதா சப்த சதியும் அறைகூவுகின்றன. இவ்விரு நூல்களில் குறுந்தொகையின் நூற்று அறுபத்தேழாம் பாடலும் காதா சப்த சதியின் பன்னிரண்டாம் பாடலும் மணஉறவுப் பெண்டிரின் அடுக்களைநிலைகளைக் குறிப்பிடுகின்றன. இங்கு அவ்விரு பாடல்களின் ஒத்த சிந்தனைகளையும் வேறுபட்ட சிந்தனைகளையும் இனங்காணப்படுகின்றன.

புதன், 29 அக்டோபர், 2014

Gnana kuuthar (16th C)


Place: Viirasaivar; VeNpaakam in Thondi Naadu..

           He is one of the scholar of  Nirambavalakiyar Desikar.

Works: ThiruvaiyaaRu puraaNam; Sepaesar puraaNam.

 ThiruvaiyaaRu puraanam: This is otherwise called as panjaNathipuraaNam. But, it seems to be different from aiyaaRRu puraaNam. It consists of 12 viruthaas apart frame foreword (Paayiram). Moreover, comprised of 437 Thiruviruthaas including foreword..

 Translated by :    R. Nithya Sathiyaraj
                
Source: Biographical Dictionary of Tamil Men of  Letters (Tamil)

வியாழன், 23 அக்டோபர், 2014

Gnanakootha Sivaprakasha Desikar (17th C)

Lived: Sivan paakkam.

           He was a saiva ascetic; got a second award in Thuraiyur Sivaprakasha Desikar monastery; specialized in Grammar and Literature.

Works: Virudhachala puraanam; Thiruvidaimaruthura puraanam

 Virudhachala puraanam: It comprised of 435 prose piece enunciated the greatness of multi - mountains of Virudhachalam.

 Translated by :    R. Nithya Sathiyaraj
                
Source: Biographical Dictionary of Tamil Men of  Letters (Tamil)

ஞாயிறு, 19 அக்டோபர், 2014

வெள்ளி, 17 அக்டோபர், 2014

திருவாவடுதுறைஆதினமடம் X தருமபுரஆதினமடம் = இலக்கியக்கொடை


முனைவர் மு.முனீஸ் மூர்த்தி
உதவிப் பேராசிரியர்
தமிழாய்வுத்துறை
பிஷப் ஹீபர் கல்லூரி
திருச்சிராப்பள்ளி.



சைவத்திருமடங்கள் 14. சமயப் பரப்புகையை முழுமுதல் நோக்கமாகக் கொண்டு செயல்பட்ட இம்மடங்கள் சமயத்தோடு தமிழை வளர்க்கவும் தலைப்பட்டன. இம்மடங்களைச் சேர்ந்தோர் வளர்த்த தமிழ் சைவத்தமிழானது. தத்தம் சமயக் கடவுளை முன்னிறுத்திப் பல புராணங்களையும் சிற்றிலக்கியங்களையும் படைத்துச் சைவத் தமிழ்த்தொண்டாற்றினர். திருமடங்களைச் சார்ந்தோரின் சைவத்தமிழ்ப்பணி ஒருபுறம் இவ்வாறிருக்க மறுபுறம் புறச்சமயக் காழ்ப்புணர்வு மனநிலையும் அரங்கேறியது. சைவர்கள் சைவ இலக்கியங்களைத் தவிர சிலப்பதிகாரம், மணிமேகலை, சிந்தாமணி போன்ற இலக்கியங்களைப் படிக்கவே கூடாது என்றுவெளிப்படையாகப் பிரச்சாரம் செய்துதங்கள் மனநிலையை வெளிப்படுத்தினர் மடங்களைச் சார்ந்தோர். இந்நிலைப்பாடுகி.பி.18ஆம் நூற்றாண்டுவரை நிலவியது கவனத்திற்குரியது. இக்காலகட்டத்தில் திருமடங்களுக்கிடையே நிலவிய உயர்வு தாழ்வுப் போராட்டத்தின் விளைவாக ஒரேசமயத்தைச் சேர்ந்த இருவேறுமடங்களைச் சேர்ந்தோரின் புலமை வெளிப்பாட்டை இருபிரிவினரும் எதிரெதிர் திசை நின்று விமர்சிக்கும் செயல்பாடு உச்சம் பெற்றது.

புதன், 17 செப்டம்பர், 2014

செவ்வாய், 2 செப்டம்பர், 2014

வியாழன், 28 ஆகஸ்ட், 2014

வெள்ளி, 15 ஆகஸ்ட், 2014

முத்துவீரியம் – பாலவியாகரண எழுத்தறிமுகம்


திராவிடமொழி இலக்கணக் கலைஞர்களுள் தமிழ், தெலுங்கு ஆயிரு மொழி இலக்கணக் கலைஞர்களே தத்தம் மொழிக்குரிய எழுத்துக்களை நூலின் தொடக்கத்தில் அறிமுகப்படுத்தும் பாங்கைக் கொண்டுள்ளனர். இப்பாங்கைப் பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த முத்துவீரிய உபாத்தியாயரிடத்தும் (தமிழ் – முத்துவீரியம்), சின்னயசூரியிடத்தும் (தெலுங்கு – பாலவியாகரணம்) காணமுடிகின்றது. அவ்விருமொழி இலக்கணக் கலைஞர்களும் எவ்வாறு தத்தம் மொழிக்குரிய எழுத்துக்களை அறிமுகம் செய்வதில் வேறுபடுகின்றனர் என்பதைச் சுட்டிக் காட்டுகின்றது இக்கட்டுரை.

செவ்வாய், 17 ஜூன், 2014

எரு


ஏருழவு - நேரிசை ஆசிரியப்பா


சாணம் தெறித்த வாசலில் பூச்சூடி
சாந்து வைத்து புதுப்பெண் ணாகக்
காட்சித் தந்திட காளைகள் மூவிரு
கம்பீ ரமாக நின்றிட கழுத்திலே
ஒய்யா ரமாய்வீற் றிருக்கும் ஏரே
வயல்வந் தவுடனே ஆண மங்கே
வயல்மண் ணுள்ளே சென்றிட அறுவர்
வரிசை மாறா துழுதி டுவாரே
வரிசை மாறா சால்கள் அழகாய்
வானவி லொத்த நெளிவாய்
அமைந்தி டுமீர் வரப்புக் கிடையிலே - நேயக்கோ

திங்கள், 16 ஜூன், 2014

அருகிவரும் குதிர்ப் பயன்பாடு


இன்று அறிவியல் எனும் விந்தையால் புதிது புதிதாக ஆயிரமாயிரம் கருவிகளையும் புழங்குப் பொருட்களையும் கண்டுபிடித்து வருகின்றோம். அவற்றிற்கிடையே பழஞ்சொத்துக்களையும் இழந்து வருகின்றோம் என்பதையும் மறந்துவிடலாகாது. ஊர்ப்புறம் (கிராமம்) என்றாலே அது நெல் விளைச்சலின் சொத்து. எனவே அது நாட்டின் முதுகெலும்பாகத் திகழ்கின்றது எனும் கருத்து வலுப்பெற்றது. அது இன்று விலை நிலங்களின் இருப்பிடமாக மாறி வருகின்றது. அதனைப் போன்றே அவ்வுழவர்கள் பயன்படுத்திய குதிரின் பயன்பாடும் மறைந்து வருகின்றது. இத்தன்மை அப்பயன்பாட்டின் மீதான அக்கறை இல்லை என்பதைக் காட்டுகின்றது.

குதிர் எனும் சொல் நெல் போன்ற தானிய வகைகளைச் சேகரிக்கப் பயன்படும் ஒருவகை கலம் என அகராதிகள் பொருள் கொள்கின்றன. இதன் பயன்பாடு பயிர்த்தொழில் கண்டுபிடிக்கப்பட்ட காலம் தொட்டே தோன்றிற்று எனலாம். அத்தொழில் புரிந்து வந்த மாந்தன் தேவைக்குப் போக மீதமிருந்தவற்றை எதிர்கலத் தேவைக்காக சேமிக்க குதிரைக் கண்டறிந்தான். அதற்கு நெற்குதிர் எனப் பெயரிட்டான். பின்பு பல தானிய வகைகளையும் சேமித்து வைக்கவும் கற்றுக் கொண்டான்.

புதன், 7 மே, 2014

தாமோதரர்கள்


கள் எனும் ஈற்றை இணைத்து தாமோதரர்கள் எனத் தலைப்பிட்டமையின் காரணம் என்னவெனின் தமிழின் குறுந்தொகையில் தாமோதரனார் பெயருடைய புலவரும், பிராகிருதத்தின் காதா சப்த சதியில் தாமோதரன் பெயருடைய புலவரும் இடம்பெறுவதேயாம். இவ்விரு மொழிப் புலவர்களும் பெயரளவில் ஒப்புமையுடையவர்கள். ஆயின் அவ்விருவர்களின் பாடல்களிலும் ஒருமித்த சிந்தனைகள் நிலவுகின்றனவா? என இக்கட்டுரை நோக்குகின்றது.
ஞாயிறு பட்ட அகல்வாய் வானத்து
அளிய தாமே கொடுஞ்சிறைப் பறவை
இணையுற ஓங்கிய நெறியயல் மராஅத்த
பிள்ளை யுள்வாய்ச் செரீஇய
இரைகொண் டமையின் விரையுமாற் செலவே   – குறுந். 92

ஞாயிறு, 4 மே, 2014

தொல்காப்பியம் – பாலவியாகரணம் கலைச்சொல் ஒப்பீடு


தமிழில் தொல்காப்பியமும், தெலுங்கில் பாலவியாகரணமும் அவ்வம்மொழிகளைக் கற்கும் மாணவர்களாலும் அறிஞர்களாலும் பெரிதும் வாசிக்கப்படுவன; வாசிக்கப்பட்டும் வருவனவாம்.  தொல்காப்பியம் கி.மு.5ஆம் நூற்றாண்டளவில் எழுதப்பட்டதாக கருதப்படுகின்றது. பாலவியாகரணம் கி.பி.1858ஆம் ஆண்டு வெளிவந்த நூலாகும். இவ்விரு நூல்களும் காலத்தால் மிகவும் வேறுபாடுடையன. இருப்பினும் வெவ்வேறு மொழிகளுக்குரிய இலக்கணங்கள் என்பதால் ஆய்விற்கு உட்படுத்தப்படுகின்றன. அவ்விரு நூல்களில் காணலாகும் கலைச் சொற்கள் குறித்து ஒப்பிட்டு விளக்குவதாக இக்கட்டுரை அமைகின்றது.

செவ்வாய், 8 ஏப்ரல், 2014

திங்கள், 7 ஏப்ரல், 2014

வெள்ளி, 4 ஏப்ரல், 2014

தமிழியல் ஆய்வுக்குச் செந்தமிழ்க் காவலரின் பங்களிப்புகள்



தஞ்சை, தமிழ்ப்பல்கலைக் கழக இந்திய மொழிகள் மற்றும் ஒப்பிலக்கியப் பள்ளியில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்பிரல் திங்கள் மூன்றாம் நாள் நிகழ்த்தப் பெறும் அறக்கட்டளைச் சொற்பொழிவு இந்த ஆண்டும் நிகழ்த்தப் பெற்றது. நிகழ்வின் தொடக்கம் தமிழ்த்தாய் வாழ்த்துடன் அத்துறைத் தலைவர் பேரா. இரா. முரளிதரன் அவர்கள் வரவேற்புரை நல்குமாறு அமைந்தது. மேனாள் மொழியியல் துறைத்தலைவர் பேரா. கி. அரங்கன் அவர்கள் வாழ்த்துரையுடன் செந்தமிழ்க் காவலர் முனைவர் அ. சிதம்பரநாதன் செட்டியார் பெயர் சொல்ல நிற்பது ஆங்கிலம் – தமிழ்ச் சொற்களஞ்சியமே எனவும், அவர் கடமை, காலம் தவறாமையும் உணர்வுகளுக்குச் சரியான குறியீடாகவும் திகழ்கின்றார் எனவும், இன்று கல்விப் பணிக்கு ஊதியம் நிறைவு; ஆனால் அதற்குரிய வேலைகளை யாரும் செய்ய முன்வருவதில்லை எனவும் கூறி அமைந்தார்.

திங்கள், 24 மார்ச், 2014

கல்வெட்டும் விழிப்புணர்வும்



கல்வெட்டாவது வரலாற்றிற்கு முதன்மைச் சான்றுகள். அது குறித்த அறிவு தமிழறிந்த அனைவருக்கும் தேவை. ஏனெனின் வரலாறுகளை மீட்டுருவாக்கி கூறவேண்டுமெனில் நம்முன்னோர் விட்டுச் சென்ற சான்றுகள் தேவைப்படுகின்றன. அக்கல்வெட்டுக் குறித்த அறிவு மக்களிடையே உள்ளதா எனில் இல்லை. இருந்திருந்தால் சான்றுகளை அழித்திருக்கமாட்டோம்; அழித்துக் கொண்டிருக்க மாட்டோம். இக்கல்வெட்டுகளைப் பாதுகாக்க பல்கலைக் கழகங்களும் அரசும் ஓரளவு தான் முயற்சி செய்துள்ளன; செய்து கொண்டிருக்கின்றன. ஆனால் அதனைப் பாதுகாக்க வேண்டிய கடப்பாடு ஒவ்வொருவருக்கும் உண்டு.

வெள்ளி, 14 மார்ச், 2014

ராதையின் ஊடலைத் தீர்த்தல்


தேனே,
நான் காளியை நசுக்கினேன்; 
ஏன் என்று நினைக்கிறாய்?
அந்தப் பாம்பு
உன் அழகான ஜடைப்பின்னுலுக்குப்
போட்டி என்பதால்
நான் கம்சனின் வில்லை உடைத்தேன்
எதற்கு என்று நினைக்கிறாய்?
அது உன் வடிவான புருவத்திற்குப்
போட்டி என்பதால்
நான் கோவர்தனமலையை
வேரோடு பிடிங்கினேன்;

தனியே நட


உன் குரல் கேட்டும்
யாரும் வரவில்லையானாலும்
டே! மடையா!
தனியே நட
உன்னுடன் சேர்ந்து
யாரும் பேசவில்லையானாலும்,
எல்லோரும்
முகம் திருப்பிக் கொண்டாலும்,
பயந்து நடுங்கினாலும்
டே! மடையா!

மேடை


மூலம் : ஆங்கிலம்
தமிழில் : ஆ. ஈஸ்வரன்

நாங்கள் எங்களின் பெயரால் அமைந்த
எந்த மேடையும் ஏறியதில்லை
நாங்கள் அதற்காக
அழைக்கப்பட்டதும் இல்லை.
எங்களின் நிலம்
எங்களுக்கே சுட்டுவிரலால் சுட்டிக் காட்டப்பட்டது.
அங்கு பயந்தவாறே இரு கால்களையும்
குத்திட்டு அமர்ந்தோம்.

சனி, 1 மார்ச், 2014

கலித்தொகை வழி அறியலாகும் தலைவன் தலைவி ஒப்புமைகள்


அன்பின் ஐந்திணையில் தலைமக்களைப் பற்றி பேசவரும் போதெல்லாம் ஒத்த தலைவனும் ஒத்த தலைவியும் என்று குறிப்பிடும் பாங்கினைக் காணலாம். தொல்காப்பியர் ஒன்றே வேறே என்றிரு பால்வயின் என வரும் நூற்பாவில் ஒத்த கிழவனும் கிழத்தியும் குறித்து விளக்கியுள்ளார். ஆனால் அங்குச் சுட்டப்படும் ஒத்த என்பதற்குரிய விளக்கத்தினை அவர் மெய்ப்பாட்டியலில் குறிப்பிடுகிறார்.

சனி, 22 பிப்ரவரி, 2014

மதிப்புரை: கன்னி மலரணியாமையும் தலைவியின் நுண்ணறிவும்: ஒப்பியல் நோக்கு


மு. அய்யனார்
முனைவர் பட்ட ஆய்வாளர்
பெரியார் உயராய்வு நடுவம்
பாரதிதாசன் பல்கலைக் கழகம்
திருச்சி -24
தமிழில் அகமரபு இலக்கியத்திற்கென்றே தனித்ததொரு மரபினைக் கொண்ட குறுந்தொகைப் பாடல்களையும் பழம் மொழிகளில் ஒன்றான பாலிமொழி இலக்கியமான பிராகிருதத்தில் இருந்து உருவாக்கப்பட்ட காதா சப்த சதியையும் ஒப்பிட்டுச் சிலகூறுகளைக் கட்டுரையாளார் முன்வைத்திருப்பது தமிழாய்வின் தேவைகளுக்குப் பயனளிக்கும் முயற்சியே ஆகும். அ. செல்வராசுவின் காலம் சுட்டிக்காட்டலில் நிலவும் மயக்கநிலையைச் சுட்டிக்காட்டும் ஆய்வாளார், சங்கச் செவ்வியல் இலக்கியங்களில் ஒன்றான குறுந்தொகையையும் காதா சப்த சதியையும் ஒரே காலத்தன என்னும் கருத்தியலை ஏற்றுக் கொள்ள முன்வந்துள்ளார். குறுந்தொகை தமிழில் இயற்றப்பட்ட அகநூல்களில் பெரும்பெயர் கொண்ட இலக்கியமாக விளங்குவது காதா சப்த சதி பாலி மொழியில் விளங்கிவந்த ஒரு பழம்பெரும் இலக்கியமாகும். கட்டுரையாளார் இரண்டிற்குமான சிறப்புகளை விளக்கும் பொழுது சில ஒற்றுமை வேற்றுமைகளை முன்வைக்கிறார். இவற்றைக் காலக் கணிப்புச்செய்கையில் சிலவற்றைக் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. அவற்றுள் சில பின்வருமாறு,

புதன், 29 ஜனவரி, 2014

கழார்க்கீரன் எயிற்றியார் காட்டும் பிரிவு


                                                                   குபேந்திரன்
                                                                       இளம் ஆய்வாளர்
                                                                       அழகப்பா பல்கலைக் கழகம்
                                                                       காரைக்குடி
முன்னுரை
          சங்க இலக்கியங்கள் பல்வேறு கால கட்டங்களில் வாழ்ந்த பல புலவர்கள் பாடிய பாடல்களின் தொகுப்பாகும். சங்க காலப் புலவர்களுள் குறிப்பிடத்தக்கவர் கழார்க் கீரன் எயிற்றியார் ஆவார். பெண்பாற் புலவர்களில் ஒருவரான இவர் வேட்டுவக் குடியினைச் சார்ந்தவர். இவர் 'கழாஅர்' என்னும் ஊரைச் சேர்ந்தவர் என்றும் இவ்வூர் தற்பொழுது தஞ்சை மாவட்டத்திலுள்ள  திருக்களார் என்றும் சோழர் படைத்தலைவராகிய கீரன் இவர்தம் கணவர் என்பதும் இவரைப் பற்றிய குறிப்புகளாகும். வேட்டுவக்குடியைச் சார்ந்த இப்புலவரின் பாடல்கள் வழி இவர்தம் தனித்தன்மையைக் காண்பது இக்கட்டுரையின் நோக்கமாகும்.

முதலெழுத்து விளக்க நெறிகளில் மரபிலக்கணங்கள்


முன்னுரை
- த. சத்தியராஜ், முனைவர் பட்ட ஆய்வாளர், இந்திய மொழிகள் & ஒப்பிலக்கியப் பள்ளி, தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர், தமிழ்நாடு, இந்தியா -
தமிழ் நெடுங்கணக்கு:  தமிழ் மொழிக்குரிய நெடுங்கணக்குகள் மொத்தம் இருநூற்றி நாற்பத்தியேழு என ஆரம்பக்கல்வியில் புகட்டப்படுகின்றது; புகட்டப்பெற்று வருகின்றது. இந்நெடுங்கணக்குகளை மரபிலக்கணிகள் முதல், சார்பு எனப் பிரித்துப் பார்க்கின்றனர். இவற்றுள் முதலெழுத்து விளக்கமுறைகளில் மரபிலக்கணிகளிடையே வேறுபாடுகள் நிலவுகின்றன. அஃதியாங்கெனின் தொல்காப்பியர் சார்பெழுத்துகள் (ஆய்தம், உயிர்மெய்) எனக் கருதியதை, முதல் எழுத்துகளுடன் இணைத்துப்பார்ப்பதேயாம்.
பதிவுகள் இதழில் 2014 சனவரித் திங்கள் 19ஆம் நாள் வெளியிடப் பெற்றது.

கன்னி மலரணியாமையும் தலைவியின் நுண்ணறிவும்: ஒப்பியல் நோக்கு

1.0. முன்னுரை
- த. சத்தியராஜ், முனைவர் பட்ட ஆய்வாளர், இந்திய மொழிகள் & ஒப்பிலக்கியப் பள்ளி, தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர், தமிழ்நாடு, இந்தியா -
தமிழில் குறுந்தொகையும், பிராகிருதத்தில் காதா சப்த சதியும் சமகாலத்திய இலக்கியங்களாகக் கருதப் பெறுகின்றன. இவ்விரு இலக்கியங்களில் முறையே 312, 189 என்ற இருபாடல்கள் ஒத்த கருத்துடையவை. இருப்பினும் அவ்விரு பாடல்களின் காலம் மட்டும் தான் மாறுபடுகிறது என்பார் அ. செல்வராசு (2008:37). ஆனால் அது களவு, கற்பு குறித்த காலமா? அல்லது பாடல் எழுதப்பட்ட காலமா? எனத் தெளிவுபடுத்தவில்லை. இருப்பினும், அவ்விரு பாடல்களில் நிலவும் அவ்விரு கவிஞர்களின் சிறப்பினைச் சுட்டிக் காட்டுவதாக இக்கட்டுரை அமைகின்றது.

அவ்விரு கவிஞர்களின்  சிறப்புகளை,
1. ஒத்த தன்மை: தலைவியின் நுண்ணறிவு

2. வேறுபட்ட தன்மை: சமகாலத்தியப் பதிவுகள்   என்றாயிரு வகைகளில் விளக்கலாம்.