வியாழன், 3 அக்டோபர், 2013

செல்லரித்த அட்டையாய்.....

மனித உயிர்களின் நேசம்
மயிர் போன்றது
நினைத்தால் முளைக்க வைக்கலாம்
வெறுத்தால் இழக்க வைக்கலாம் - இதில்
வாய் பேசா குழந்தை
தலையும், தடுமாறும்
மனமும் தான்.
ஆசை ஆசையாய் வைக்கும்
பாசம் சில தருணங்களில்
முள்ளில் சிக்கிய ஆடைதான்
நினைத்தால் ஆள்வது நீயாயிருப்பாய்
இல்லாவிடில் முள்ளே ஆண்டு விடும்.

பனித்துளிகள் என்மீது பட்டும்
சிலிர்த்துப் போகாத நான்
உன் மூச்சுக் காற்றினை
நினைத்து நினைத்து தினமும்
உருகி விடுகிறேன்.

மறக்க முடியுமா
என்ற உன் கேள்விக்கு
மறக்க முடியுமென நினைத்தேன்
நீயாய் வந்து
என்னைத் தொடாதபோது
என்னிடம் பேசாத போது
என்னை நினைக்காத போது
உன்னை மறந்திருப்பேன்.

ஆனால்.......
உன் உருவம் இல்லா
நினைவுகள் + நீ அனுப்பிய குறுஞ்செய்திகள்
உன்னையே நினைவாக்கிய இடபுலங்கள்
இவைகளெல்லாம் ஒன்று சேர்ந்த நிலையாய்
செல்லரித்த அட்டையாய்
சிறிது சிறிதாய்
சிதலமடைகின்றனே!
                                                        - சே. முனியசாமி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன