சனி, 26 அக்டோபர், 2013

கடிகாரம்


மூலம்: கன்னடம் (தினகர தேசாயி)
தமிழில்: சே. முனியசாமி
                
நேரத்துக்குச் சொந்தமே கடிகாராம்
வெள்ளியின் நிறத்து வட்ட உருவமே
நேரத்தை அறிவதற்கு நீ ஆதாரம்
டிக் டிக் நண்பனே டிக் டிக் டிக்

வெள்ளி, 25 அக்டோபர், 2013

ஆதிகவி பம்பா

மூலம்: கன்னடம்
தமிழில்: சே. முனியசாமி
இந்தியாவில் நாலாயிரத்துக்கு மேற்பட்ட மொழிகள் பேசப்பட்டு வருகின்றன. பல மொழிகள் காணப்படினும் அதில் சிறப்பு வாய்ந்தவை சிலவே. ஏனெனில் பல மொழிகள் பேச்சுமொழிகளாக  காணலாகின்றன. இத்தகைய மொழிகளுக்கு   எழுத்து வடிவம் இல்லை. திராவிட மொழிகளுக்கு தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என தனிச்சிறப்பு உண்டு.  இம்மொழி  கர்நாடக மாநிலத்தில் பேசப்படுகிறது. இக்கன்னட மொழியில் பழமை வாய்ந்த இலக்கிய இலக்கணங்கள் மிகுந்து காணலாகின்றன. இருப்பின் அம்மொழியின் முதல் கவியாக திகழ்பவர் பம்பா.

செவ்வாய், 22 அக்டோபர், 2013

ஒன்பான் துளைகள்

நம் உடலில் ஒன்பது வகைத் துளைகள் உள்ளன. அவை:

  1. கண் - 2
  2. காது - 2
  3. மூக்கு
  4. வாய்
  5. குதம்
  6. குய்யம்
  7. கொப்பூழ்

ஞாயிறு, 20 அக்டோபர், 2013

தமிழ் வளர்ச்சியில் ஈரோடு மாவட்டம் - புலவர் செ.இராசுவின் வரலாற்றுப் பார்வை

   வரலாற்றுச் சிறப்புமிக்க ஈரோடு மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சி பற்றிய செய்திகள் வரலாற்றில் போதுமான அளவு இடம்பெறவில்லை. அக்குறையை நீக்கித் தமிழ் வளர்ச்சியில்  ஈரோடு மாவட்டத்தின் பங்கு பற்றி புலவர் இராசு அவர்கள் ஈரோடு மாவட்ட வரலாறு என்ற சிறப்பு மிக்க படைப்பின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.  இந்நூல் தமிழக வரலாற்றில் தமிழ் வளர்ச்சியில் ஈரோடு மாவட்டத்தின் பங்கு என்ன? என்பதையும், அக்காலத்தில் தமிழ்ச்சூழல், தமிழின் வளர்ச்சி நிலை ஆகியவற்றைத் தெளிவாகவும், விரிவாகவும் சங்ககாலம் தொடங்கி இக்காலம் வரை தமிழ் வளர்ச்சியில் ஈரோடு மாவட்டத்தின் பங்கு பற்றியும் விவரித்துள்ளார்.

வெள்ளி, 18 அக்டோபர், 2013

வியாழன், 17 அக்டோபர், 2013

மனநோய்

                                                                                                  - த. சத்தியராஜ்
    இவ்வுலகில் வாழும் மனிதர் அனைவரும் மனநோய் உடையவர்களே. அந்நோயின் வெளிப்பாடு அவரவர் விருப்பத்திற்கேற்ப அமையும். அவ்விருப்பம் மட்டுமே மனநோயாகாது. தற்சிந்தனையின்மையும் அதன்பாற்படும் என்பது தெலுங்குக் கவிஞர் வேமனாவின் எண்ணம். அவர்,

வெள்ளி, 11 அக்டோபர், 2013

திருக்குறளின் பழைய உரையர் பதின்மர்


  1. தருமர்
  2. மணக்குடவர்
  3. தாமத்தர்
  4. நச்சர்
  5. பரிதி

உருவம்

மனித உருவிற்கு
துணைநிற்பது
பல உறுப்புகள்...
வாழ்க்கைக்குத் துணைநிற்பது
பல உறவுகள்...
பல இணைப்புகளின்றி
ஏதுமில்லை உலகிலே!
                                                 - இரா. நித்யா சத்தியராஜ்

வியாழன், 10 அக்டோபர், 2013

தாய்மை

தாயின்
சுமைகளையும் வேதனைகளையும்
யானறியேன்
மகளாய்
அறிந்தேன்
யான் தாயான போது.
                                                   - இரா. நித்யா சத்தியராஜ்

தந்தைமொழி

குழந்தையாக இருந்தபோது
தந்தைமொழி கசந்தது
தந்தை என்னருகில் இல்லை
அவரது மொழி என்னருகில்
ஒலிக்கிறது இனிமையாக
நான் தாயான போது
                                         - இரா. நித்யா சத்தியராஜ்

சுவாமிநாதம் – பாலவியாகரணம் புறக்கட்டமைப்பு நிலை ஒப்பீடு



-       . சத்தியராஜ்

கி.பி.19ஆம் நூற்றாண்டில் சுவாமிநாதமும்(தமிழ்) பாலவியாகரணமும்(தெலுங்கு) எழுதப்பெற்றன. இவ்விரு நூலாசிரியர்கள் முறையே சாமிகவிராயரும் சின்னயசூரியும் ஆவர். சாமிகவிராயர் தமிழ் இலக்கணக் கூறுகளை விளக்கியுள்ளார். சின்னயசூரி, தெலுங்கு இலக்கணக் கூறுகளுடன் சமசுகிருதம், பிராகிருதம் ஆகிய மொழிக்குரிய இலக்கணக் கூறுகளையும் விளக்கியுள்ளார். இதனைச் சஞ்ஞா பரிச்சேதம் முதற்கொண்டே காணலாம். பெரும்பான்மையான  இடங்களில், தெலுங்கு சமசுகிருத இலக்கணக் கூறுகளை ஒப்பிட்டு விளக்கியுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

குறுந்தொகையும் காதா சப்த சதியும் புலப்படுத்தும் விலைமகளிர் நெறிகள்

பரத்தை எனும் சொல்லும், காமக்கிழத்தி எனும் சொல்லும் தொல் வழக்கில் இருந்துள்ளதென்பது தொல்காப்பியம் காட்டும் உண்மை. இச்சொற்கள் தற்பொழுது மருவி விலைமகளிர் , விபச்சாரி (Prostitute) என வழங்கப்படுகின்றன. இம்மகளிர்களின் வாழ்க்கைநெறி காம நுகர்ச்சியினால் தம்மை நாடி வருவோருக்கு, அத்தாகத்தைத் தீர்த்து மகிழ்ச்சி அளிப்பதேயாம் என்பது உலகளாவிய பொதுச்சிந்தனை. இதனை ஒவ்வொரு மொழி இலக்கியங்களும் பதிவு செய்துள்ளன; பதிவு செய்தும் வருகின்றன. அச்சிந்தனையைத் தமிழில் குறுந்தொகையும், பிராகிருதத்தில் காதா சப்த சதியும்  பதிவு செய்துள்ளன. அதனை ஒப்பிடுவதாக இக்கட்டுரை அமைகிறது.
மேலும் வாசிக்க: http://www.muthukamalam.com/essay/literature/p60.html

செவ்வாய், 8 அக்டோபர், 2013

கணவன் மனைவி உறவு

சிறு சிறு கண்டிப்பு
சிறு சிறு அரவணைப்பு
சிறு சிறு கேலிப்பேச்சு
சிறு சிறு கிண்டல் பேச்சு
சிறு சிறு அறிவுரை

காதற்கிழவன்

என்னால் முடியாது
உங்கள் உதவியில்லையேல்
என் காதற்கிழவனே
எனது முன்னேற்றத்தில்
உங்கள் பாங்கு முக்கியப் பங்கு
                                                              - இரா.நித்யா சத்தியராஜ்


ஞாயிறு, 6 அக்டோபர், 2013

Truth

Nothing is valuable,
Precious and Golden thing
Unless came across hurdles,
Struggles and obstacles.
                                              - R. Nithya Sathiyaraj

சனி, 5 அக்டோபர், 2013

மழலைச் செல்வம்

என் குழந்தாய்
என் துயர்
நீக்க வந்த புதல்வியே!
சிரிக்க வைத்தாய்
என்னை
சில பாவணைகள்
செய்து.
                                       - இரா. நித்யா சத்தியராஜ்  

வெள்ளி, 4 அக்டோபர், 2013

பிரதான குருவின்(போப்பின்) தரிசனம் - The Pope's Visit

வாடிகனிலிருக்கும் பிரதான குருவே
அவரது பாதையிலிருக்கும் விமானம்
ஆயிரமைல் தொலைவினிலே
அவரது களங்கமற்ற அங்கியில் தாக்க செய்து
வழுக்கைக் குல்லாய் அணிந்த தலையையும்
அன்பு கனிந்த முகத்தையும்
ஆராய்ச்சியும் ஆர்வமிக்கக் கண்களையும்
சுருண்ட பட்டின்மேல் ஓரடியில்

வியாழன், 3 அக்டோபர், 2013

செல்லரித்த அட்டையாய்.....

மனித உயிர்களின் நேசம்
மயிர் போன்றது
நினைத்தால் முளைக்க வைக்கலாம்
வெறுத்தால் இழக்க வைக்கலாம் - இதில்
வாய் பேசா குழந்தை
தலையும், தடுமாறும்
மனமும் தான்.