வெள்ளி, 27 செப்டம்பர், 2013

தமிழில் விழிப்பே இல்லை

  சென்ற 50 ஆண்டுகளில் இந்தியா 220 மொழிகளை இழந்து விட்டது! 1961 இல் 110 மொழிகளே இருந்தன. 2011 இல் 780 மொழிகள் இருந்தன. மூன்று அல்லது நான்கு விழுக்காடு மொழிகளைப் பேசும் மக்க்ள் தொகை ஐந்துகோடி இருக்கலாம். இடம் பெறுதல் ஒரு முக்கியக் காரணம். பொருளாதர பலம் இல்லாமை; மொழி அங்கீகாரம் இல்லாமை. பரோடாவில் உள்ள பாசா ஆராய்ச்சி மையம் அளிக்கும் புள்ளி விவரங்கள்.

  அடுத்த இருபது அல்லது முப்பது ஆண்டுகளில் கன்னடமொழி, பிரஞ்சு, ஜெர்மன் மொழியை விட வளர்ச்சி காணும் என்கிறார் ஒரு கன்னட அறிஞர். தமிழ்மொழி உலக மொழியாக வளர உலக அறிவி வளர்ச்சிகளைத் தமிழில் எழுத வேண்டும் என்று நாம் சொல்லி வருகிறோம். கன்னட மொழி இலக்கியத்துக்கு எட்டு ஞானபீட பரிசுகள். நாவல், கவிதை, தத்துவம் எழுதியதற்கு இப்பரிசுகள். தமிழில் விழிப்பே இல்லை. எல்லாமே அரசியல் ஆக்கிப் பேசுகிறோம்! இம்மனப்பான்மை மாறவேண்டும். தமிழர்கள், வெளிமாநிலங்களிளை, வெளிநாடுகளைப் பார்க்க வேண்டும். இதற்குச் சர்வதேச எழுத்துகள், விவாதங்கள் தேவை!

நன்றி: வளரும் விவசாய தமிழகம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன