ஞாயிறு, 22 டிசம்பர், 2013

களாபூரணோதயத்தில் உவமைகள்

                                                                                                                                - இரா. நித்யா
1.0 முன்னுரை
தெலுங்கு இலக்கிய உலகில் குறிபிடத்தக்கவர் பிங்களிசூரனார். இவர் களாபூரணோதயம் எனும் கற்பனைக் காவியத்தைப் படைத்துள்ளார். இப்படைப்பில் பாத்திரங்களை அறிமுகப்படுத்துமிடத்தும், அப்பாத்திரங்களின் தன்மைகளைக் குறிக்குமிடத்தும், இயற்கைச் சார்ந்த காட்சிகளை வருணிக்குமிடத்தும் உவமைகளைப் பயன்படுத்தியுள்ளார். அவ்வுமைக் குறித்து விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
2.0 பிங்களிசூரனாரும் களாபூரணோதயமும்
தெலுங்கு இலக்கிய பிரபந்தங்களின் வளர்ச்சிக்கு அடிகோலியவர்களுள் ஒருவர் பிங்களிசூரனார். இவர் பதினாறாம் நூற்றாண்டைச் சார்ந்த கிருட்டிணத்தேவராயர் ஆட்சிக் காலத்தில் வாழ்ந்தவரும், இங்கிலாந்தைச் சார்ந்த  சேச்சுப்பியருக்குச் சமகாலத்தவரும் ஆவார். அவர் சைவ சமயத்தைச் சார்ந்தவரானாலும் வைணவக் கருத்துகள் மிகுந்த களாபூரணோதயத்தை (திருமாலை வழிபடக்கூடிய கிருட்டிணத்தேவராயரின் வேண்டுகோளுக்கிணங்க எழுதப்பட்டது) எழுதினார் என்பது குறிப்பிடத்தக்கது. அக்காலத்தில் தெலுங்கில் பிரபலமாக இருந்த கவிதைப்போக்கு பிரபந்தம் இயற்றுவதாகும். இது இலக்கியத்தின் உயிர்நாடி போன்றது. இதனை இயற்றுவதில் அட்டதிக்கசங்கள் (எண்திசைப் புலவர்கள்) என்றழைக்கப்பட்ட புலவர்களே சிறந்து விளங்கினர். அவ்வட்டதிக்கசங்களுள் ஒருவர் பிங்களிசூரனார். இவர் இராகவபாண்டவியம் (சிலேடைக் காவியம்), பிரபாவதி பிரத்தியுமனம், களாபூரணோதயம் ஆகிய பிரபந்தங்களை இயற்றியுள்ளார்.
மேலும் வாசிக்கhttp://www.geotamil.com/pathivukalnew/index.php?option=com_content&view=article&id=1840:2013-11-23-05-28-07&catid=2:2011-02-25-12-52-49&Itemid=19 (பதிவுகள் இதழில் வெளியிடப்பெற்ற கட்டுரை)

வெள்ளி, 20 டிசம்பர், 2013

தெலுங்கு மரபிலக்கணங்களில் இலக்கணக்கலைச் சொற்கள்

            தெலுங்கு இலக்கணங்கள் கலைச் சொற்களுக்குப் பருந்துப் பார்வை பாரிபாஷிக பதாலு, சஞ்ஞாலு என இரு சொற்களைப் பயன்படுத்தியுள்ளன. அவ்விலக்கணங்களில் காணப்படும் கலைச் சொற்களை மூன்று வகையாகப் பிரித்துக் கூறலாம். அவை : -
1.    சமற்கிருத பிராகிருத மொழிக்குரியன
2.    தூய தெலுங்கு மொழிக்குரியன
3.    மணிப்பிரவாள நடை
1.    சமற்கிருதத்தில் தோன்றிய தெலுங்கு இலக்கணங்கள்
            சமற்கிருதத்தில் எழுதப்பட்ட தெலுங்கு மொழிக்கான இலக்கணங்களின் அமைப்பு முறை சுலோக வடிவில் காணப்படுகிறது. இவ்வமைப்பு முறையில் வரும் முதல் இலக்கணம் ஆந்திர சப்த சிந்தாமணி.

வெள்ளி, 29 நவம்பர், 2013

திருவள்ளுவரும் கிரேக்க அறிஞர்களும் [சாக்ரடீஸ், அரிஸ்டாடில், பிளேட்டோ]

முன்னுரை
உலகில் உணர்வு ஒன்றுபடும் நிலையில் ஒத்த கருத்துக்கள் ஒருங்கே மலர்ந்து எங்கும் மணம் பரப்புதல் இயல்பாதல் உண்டு. மொழி வேற்றுமையும்  திசை வேற்றுமையும் பாராது மக்கள் கலந்து பழகிய பாங்கினாலும், படித்த மேதைகளுக்கிடையே நிகழ்ந்த அறிவுப் பரிமாற்றத்தாலும், அரசியல் வாணிபத் தொடர்புகளாலும், சமயச் சார்பாலும் வேற்றுமைக்கிடையில் ஒற்றுமை காணும் உணர்வு இவ்வுலகில் வளர்ந்து வருவதைக் காணலாம். மனிதகுல வாழ்க்கைக்குத் தேவையான நல்வழி கருத்தியல்களைக் குறித்து சமய தத்துவ ஞானிகள் ஒருபுறமும், இலக்கண இலக்கிய மேதைகள் மறுபுறமும் விளக்கமாகவும், குறிப்பாகவும் கூறிச் சென்றுள்ளனர். இங்குத் திருவள்ளுவரின் பொதுநலச் சிந்தனைகளோடு, கிரேக்க அறிஞர்களான சாக்ரடீஸ், பிளேட்டோ, அரிஸ்டாட்டில் ஆகியோர்களின் பொது நலச் சிந்தனைகளை ஒப்பிட்டு ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

புதன், 20 நவம்பர், 2013

எதற்கு?

                                                                                                                                  - த. சத்தியராஜ்
கி.பி.பதினேழாம் நூற்றாண்டில் புரட்சி மிகுந்த சிந்தனைகளைத் தெலுங்கு மக்களிடையே பரப்பி வந்தார் வேமனா. இவரின் சிந்தனைகளை அறியாத தெலுங்கரே இல்லை எனலாம் என்பர். அந்த அளவிற்கு அவருடைய கருத்துகள் மக்களிடையே செல்வாக்குப் பெற்றிருந்தன. அவர் சிறந்த ஞானியாகவும் திகழ்ந்துள்ளார்.

ஞாயிறு, 17 நவம்பர், 2013

கேடு


முகப்பு
- த. சத்தியராஜ், முனைவர் பட்ட ஆய்வாளர், இந்திய மொழிகள் & ஒப்பிலக்கியப் பள்ளி, தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர், தமிழ்நாடு, இந்தியா -
அறம் பாடுவதில் திராவிட மொழிகளின் மும்மூர்த்திகள் திருவள்ளுவர் (தமிழ்), வேமனா (தெலுங்கு), சர்வக்ஞர் (கன்னடம்) ஆவர். இவர்கள் பொதுமானுட வாழ்வைப் பாடுவதில் தலைசிறந்து விளங்கினர். அவர்கள் முறையே கி.மு., கி.பி.17, கி.பி.15 ஆகிய காலங்களில் வாழ்ந்தவர்கள். அம்மூவரும் ஊர் ஊராகச் சுற்றி மக்களிடையை அறக்கருத்தியல்களை வலியுறுத்தியவர்கள் என்பது நினைவிற்கொள்ளத்தக்கது.

அம்மும்மூர்த்திகளுள் கேடுகள் தரக்கூடிய செயல்பாடுகளைப் பிறவற்றுடன் உவமைப்படுத்திக் கூறும் போக்கு திருவள்ளுவரிடமும் வேமனவிடமும் காணப்படுகின்றது. ஆனால், அக்கேடுகள் எவை என நீண்டதொரு பட்டியலைத் தருவதில் சர்வக்ஞர் திகழ்கிறார். அவ்வாறு திகழ்வதற்கும் ஒரு காரணம் உண்டு. கேடுகளாக அறியக்கூடியவற்றை அனைத்தையும் உவமைப்படுத்திக் கூறினால் அது விரியும். ஆகையால் அவர் சுருக்கித் தொகுத்து விளக்கியுள்ளார். இத்தன்மையைச் சுட்டிக்காட்டுவதாக இக்கட்டுரை அமைகின்றது.

சனி, 9 நவம்பர், 2013

தாயின் கண்ணீரும் குமுறலும்


பாலூட்டி சோறூட்டி 
தாலாட்டி சீராட்டி 
என் செல்லத்தை வளர்த்தேனடா 
இழவுக்குப் போய் திரும்ப 
இழவடா எம் இல்லத்து 
மானத்தைப் பறித்த கயவனே 
உயிரையும் அல்லவா பறித்திட்டாயடா 

சனி, 2 நவம்பர், 2013

விழாவா? உடல் நலமா?

சுவாசத்துக்குக் கேடு
செவிக்குக் கேடு
திடமனத்திற்குக் கேடு
காற்றுக்குக் கேடு
பட்டாசெனும் வெடியாம்! - அதை

சில்லரை மனிதனடா

எனக்குத் தீபஒளி
ஈழத்தில் வசிக்கும் எம் சொந்தத்திற்கோ
தீராவலி
நான்வேறு அவன்வேறு பிரிக்கவில்லை
மனித உயிர்களை மதிக்கத் தெரியாத பாவிகளே
தமிழனின் ராட்சத உயிர்களை

அவனின் உருவாக்கம்

அவனின் எல்லையிலாக் காதல்
அவனை உருவாக்கியது
குற்றமுள்ள மனிதர்களால் கிளித்தெரியப்படவில்லை
பாலைவனத்தில் வீசும் காற்றினால் சுத்தம் செய்யப்படவில்லை

சனி, 26 அக்டோபர், 2013

கடிகாரம்


மூலம்: கன்னடம் (தினகர தேசாயி)
தமிழில்: சே. முனியசாமி
                
நேரத்துக்குச் சொந்தமே கடிகாராம்
வெள்ளியின் நிறத்து வட்ட உருவமே
நேரத்தை அறிவதற்கு நீ ஆதாரம்
டிக் டிக் நண்பனே டிக் டிக் டிக்

வெள்ளி, 25 அக்டோபர், 2013

ஆதிகவி பம்பா

மூலம்: கன்னடம்
தமிழில்: சே. முனியசாமி
இந்தியாவில் நாலாயிரத்துக்கு மேற்பட்ட மொழிகள் பேசப்பட்டு வருகின்றன. பல மொழிகள் காணப்படினும் அதில் சிறப்பு வாய்ந்தவை சிலவே. ஏனெனில் பல மொழிகள் பேச்சுமொழிகளாக  காணலாகின்றன. இத்தகைய மொழிகளுக்கு   எழுத்து வடிவம் இல்லை. திராவிட மொழிகளுக்கு தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என தனிச்சிறப்பு உண்டு.  இம்மொழி  கர்நாடக மாநிலத்தில் பேசப்படுகிறது. இக்கன்னட மொழியில் பழமை வாய்ந்த இலக்கிய இலக்கணங்கள் மிகுந்து காணலாகின்றன. இருப்பின் அம்மொழியின் முதல் கவியாக திகழ்பவர் பம்பா.

செவ்வாய், 22 அக்டோபர், 2013

ஒன்பான் துளைகள்

நம் உடலில் ஒன்பது வகைத் துளைகள் உள்ளன. அவை:

  1. கண் - 2
  2. காது - 2
  3. மூக்கு
  4. வாய்
  5. குதம்
  6. குய்யம்
  7. கொப்பூழ்

ஞாயிறு, 20 அக்டோபர், 2013

தமிழ் வளர்ச்சியில் ஈரோடு மாவட்டம் - புலவர் செ.இராசுவின் வரலாற்றுப் பார்வை

   வரலாற்றுச் சிறப்புமிக்க ஈரோடு மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சி பற்றிய செய்திகள் வரலாற்றில் போதுமான அளவு இடம்பெறவில்லை. அக்குறையை நீக்கித் தமிழ் வளர்ச்சியில்  ஈரோடு மாவட்டத்தின் பங்கு பற்றி புலவர் இராசு அவர்கள் ஈரோடு மாவட்ட வரலாறு என்ற சிறப்பு மிக்க படைப்பின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.  இந்நூல் தமிழக வரலாற்றில் தமிழ் வளர்ச்சியில் ஈரோடு மாவட்டத்தின் பங்கு என்ன? என்பதையும், அக்காலத்தில் தமிழ்ச்சூழல், தமிழின் வளர்ச்சி நிலை ஆகியவற்றைத் தெளிவாகவும், விரிவாகவும் சங்ககாலம் தொடங்கி இக்காலம் வரை தமிழ் வளர்ச்சியில் ஈரோடு மாவட்டத்தின் பங்கு பற்றியும் விவரித்துள்ளார்.

வெள்ளி, 18 அக்டோபர், 2013

வியாழன், 17 அக்டோபர், 2013

மனநோய்

                                                                                                  - த. சத்தியராஜ்
    இவ்வுலகில் வாழும் மனிதர் அனைவரும் மனநோய் உடையவர்களே. அந்நோயின் வெளிப்பாடு அவரவர் விருப்பத்திற்கேற்ப அமையும். அவ்விருப்பம் மட்டுமே மனநோயாகாது. தற்சிந்தனையின்மையும் அதன்பாற்படும் என்பது தெலுங்குக் கவிஞர் வேமனாவின் எண்ணம். அவர்,

வெள்ளி, 11 அக்டோபர், 2013

திருக்குறளின் பழைய உரையர் பதின்மர்


  1. தருமர்
  2. மணக்குடவர்
  3. தாமத்தர்
  4. நச்சர்
  5. பரிதி

உருவம்

மனித உருவிற்கு
துணைநிற்பது
பல உறுப்புகள்...
வாழ்க்கைக்குத் துணைநிற்பது
பல உறவுகள்...
பல இணைப்புகளின்றி
ஏதுமில்லை உலகிலே!
                                                 - இரா. நித்யா சத்தியராஜ்

வியாழன், 10 அக்டோபர், 2013

தாய்மை

தாயின்
சுமைகளையும் வேதனைகளையும்
யானறியேன்
மகளாய்
அறிந்தேன்
யான் தாயான போது.
                                                   - இரா. நித்யா சத்தியராஜ்

தந்தைமொழி

குழந்தையாக இருந்தபோது
தந்தைமொழி கசந்தது
தந்தை என்னருகில் இல்லை
அவரது மொழி என்னருகில்
ஒலிக்கிறது இனிமையாக
நான் தாயான போது
                                         - இரா. நித்யா சத்தியராஜ்

சுவாமிநாதம் – பாலவியாகரணம் புறக்கட்டமைப்பு நிலை ஒப்பீடு



-       . சத்தியராஜ்

கி.பி.19ஆம் நூற்றாண்டில் சுவாமிநாதமும்(தமிழ்) பாலவியாகரணமும்(தெலுங்கு) எழுதப்பெற்றன. இவ்விரு நூலாசிரியர்கள் முறையே சாமிகவிராயரும் சின்னயசூரியும் ஆவர். சாமிகவிராயர் தமிழ் இலக்கணக் கூறுகளை விளக்கியுள்ளார். சின்னயசூரி, தெலுங்கு இலக்கணக் கூறுகளுடன் சமசுகிருதம், பிராகிருதம் ஆகிய மொழிக்குரிய இலக்கணக் கூறுகளையும் விளக்கியுள்ளார். இதனைச் சஞ்ஞா பரிச்சேதம் முதற்கொண்டே காணலாம். பெரும்பான்மையான  இடங்களில், தெலுங்கு சமசுகிருத இலக்கணக் கூறுகளை ஒப்பிட்டு விளக்கியுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

குறுந்தொகையும் காதா சப்த சதியும் புலப்படுத்தும் விலைமகளிர் நெறிகள்

பரத்தை எனும் சொல்லும், காமக்கிழத்தி எனும் சொல்லும் தொல் வழக்கில் இருந்துள்ளதென்பது தொல்காப்பியம் காட்டும் உண்மை. இச்சொற்கள் தற்பொழுது மருவி விலைமகளிர் , விபச்சாரி (Prostitute) என வழங்கப்படுகின்றன. இம்மகளிர்களின் வாழ்க்கைநெறி காம நுகர்ச்சியினால் தம்மை நாடி வருவோருக்கு, அத்தாகத்தைத் தீர்த்து மகிழ்ச்சி அளிப்பதேயாம் என்பது உலகளாவிய பொதுச்சிந்தனை. இதனை ஒவ்வொரு மொழி இலக்கியங்களும் பதிவு செய்துள்ளன; பதிவு செய்தும் வருகின்றன. அச்சிந்தனையைத் தமிழில் குறுந்தொகையும், பிராகிருதத்தில் காதா சப்த சதியும்  பதிவு செய்துள்ளன. அதனை ஒப்பிடுவதாக இக்கட்டுரை அமைகிறது.
மேலும் வாசிக்க: http://www.muthukamalam.com/essay/literature/p60.html

செவ்வாய், 8 அக்டோபர், 2013

கணவன் மனைவி உறவு

சிறு சிறு கண்டிப்பு
சிறு சிறு அரவணைப்பு
சிறு சிறு கேலிப்பேச்சு
சிறு சிறு கிண்டல் பேச்சு
சிறு சிறு அறிவுரை

காதற்கிழவன்

என்னால் முடியாது
உங்கள் உதவியில்லையேல்
என் காதற்கிழவனே
எனது முன்னேற்றத்தில்
உங்கள் பாங்கு முக்கியப் பங்கு
                                                              - இரா.நித்யா சத்தியராஜ்


ஞாயிறு, 6 அக்டோபர், 2013

Truth

Nothing is valuable,
Precious and Golden thing
Unless came across hurdles,
Struggles and obstacles.
                                              - R. Nithya Sathiyaraj

சனி, 5 அக்டோபர், 2013

மழலைச் செல்வம்

என் குழந்தாய்
என் துயர்
நீக்க வந்த புதல்வியே!
சிரிக்க வைத்தாய்
என்னை
சில பாவணைகள்
செய்து.
                                       - இரா. நித்யா சத்தியராஜ்  

வெள்ளி, 4 அக்டோபர், 2013

பிரதான குருவின்(போப்பின்) தரிசனம் - The Pope's Visit

வாடிகனிலிருக்கும் பிரதான குருவே
அவரது பாதையிலிருக்கும் விமானம்
ஆயிரமைல் தொலைவினிலே
அவரது களங்கமற்ற அங்கியில் தாக்க செய்து
வழுக்கைக் குல்லாய் அணிந்த தலையையும்
அன்பு கனிந்த முகத்தையும்
ஆராய்ச்சியும் ஆர்வமிக்கக் கண்களையும்
சுருண்ட பட்டின்மேல் ஓரடியில்

வியாழன், 3 அக்டோபர், 2013

செல்லரித்த அட்டையாய்.....

மனித உயிர்களின் நேசம்
மயிர் போன்றது
நினைத்தால் முளைக்க வைக்கலாம்
வெறுத்தால் இழக்க வைக்கலாம் - இதில்
வாய் பேசா குழந்தை
தலையும், தடுமாறும்
மனமும் தான்.

திங்கள், 30 செப்டம்பர், 2013

ஞாயிறு, 29 செப்டம்பர், 2013

ஆறுமுக நாவலரும் அவர்தம் தமிழ்ப்பணியும்


உரைநடை வளர்ச்சி 19ஆம் நூற்றாண்டில் தான் வளர்ச்சிப் பாதையே நோக்கிப் பயணமாகியது. இந்நூற்றாண்டில்  அரசியலாரும், கிறித்துவ மதக்குருக்களும் நாடு முழுவதும் பல்கலைக் கழகங்களையும், பாடசாலைகளையும் நிறுவினர். ஐரோப்பிய முறைப்படி மாணவர்களுக்குப் பற்பல பாடங்களைக் கற்பித்தனர். சென்னைக் கல்விச்சங்கம்(Madras College) என்பதை நிறுவிப் பாடப் புத்தகங்களையும், உரைநடைப் புத்தகங்களையும் எழுதி வெளியிட்டனர்.
      இதே காலகட்டத்தில் சென்னைப் பள்ளிப் புத்தகக் கழகம் (The madras school society) என்பதை 1850இல் நிறுவி சிறந்த மொழிபெயர்ப்பு நூல்களுக்கு இக்கழகத்தார் தகுந்த பரிசுகளை வழங்கி உரைநடை இலக்கிய வளர்ச்சிக்குப் பெரிதும் தொண்டாற்றினர்.

சனி, 28 செப்டம்பர், 2013

பயம்

கல்வி பழகிய பந்தம்
அறிந்தேன் அன்று
எவ்வாறு சுவைப்பது என்று
சுவைக்க ஆரம்பிக்கும் முன்
திருமண பந்தம்
குழந்தை பந்தம்
 மீண்டும் கைகூடியது
கல்வி பந்தம்

இப்போது பயம்
கல்வியில் திளைத்து
குடும்பத்தைத் தவறவிடுவேனோ என
                                               -  இரா. நித்யா சத்தியராஜ்


உயர் கல்வியின் நிலைப்பாடுகள்


அண்மையில் ஆங்கில நாளேடு ஒன்று, உலக அளவில் பல்கலைக்கழகங்களை தரவரிசைப்படுத்தி ஒன்று முதல் இருநூறு வரையிலான பல்கலைக்கழகங்களின் பெயரை வெளியிட்டிருந்தது. அப்பட்டியலில் இந்தியாவில் உள்ள எந்த ஒரு பல்கலைக்கழகத்தின் பெயரும் இடம்பெறாதது இந்தியக் கல்வியாளர் ஒவ்வொருவரும் வெட்கப்படத்தக்கது. அருகில் உள்ள மிக மிகச் சிறு நாடான சிங்கப்பூர் பல்கலைக்கழகங்களின் பெயர்கள் அந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. இந்திய நாட்டிலேயே உயர்கல்வியை வழங்கி வருவதாக முரசு கொட்டிக்கொண்டிருக்கும் தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்கள் எதுவும் அப்பட்டியலில் இடம்பெறாதது குறிப்பிடத்தக்கது.

வெள்ளி, 27 செப்டம்பர், 2013

தமிழில் விழிப்பே இல்லை

  சென்ற 50 ஆண்டுகளில் இந்தியா 220 மொழிகளை இழந்து விட்டது! 1961 இல் 110 மொழிகளே இருந்தன. 2011 இல் 780 மொழிகள் இருந்தன. மூன்று அல்லது நான்கு விழுக்காடு மொழிகளைப் பேசும் மக்க்ள் தொகை ஐந்துகோடி இருக்கலாம். இடம் பெறுதல் ஒரு முக்கியக் காரணம். பொருளாதர பலம் இல்லாமை; மொழி அங்கீகாரம் இல்லாமை. பரோடாவில் உள்ள பாசா ஆராய்ச்சி மையம் அளிக்கும் புள்ளி விவரங்கள்.

புதன், 25 செப்டம்பர், 2013

மனித இயல்பு

அனுபவ
வார்த்தைகளை
கேட்க மறுக்கும் மனமே
அனுபவித்து
அறிந்து கொள்வது ஏனோ?
                                                           - இரா. நித்யா சத்தியராஜ்  

ஐவகைக் கூந்தல்


  1. முடி
  2. கொண்டை
  3. சுருள்
  4. குழல்
  5. பனிச்சை

கொடைஞர் 21பேர்

முதல் ஏழு கொடைஞர்
  1. குமணன்
  2. சகரன்
  3. சகாரன்
  4. செம்பியன்
  5. துந்துமாரி
  6. நளன்
  7. நிருதி

செவ்வாய், 24 செப்டம்பர், 2013

திங்கள், 23 செப்டம்பர், 2013

நெல்லையும் முல்லையும்

கூட்டுடன்படிக்கை அல்ல அது
நாட்டை அடக்கும் படையெடுக்கை
கூவி கூவி கூறு போட்டு விற்கும்
அந்நியன்தானே சூதுள்ள சூனியக்காரன்
ரஷ்யா ஒப்பந்தம்
ராட்சத நிர்பந்தம்

மொழிகள்

இளமையில் காதல்
மொழிகள்...
முதுமையில் அனுபவ
மொழிகள்...
                                            - இரா. நித்யா சத்தியராஜ் 

ஞாயிறு, 22 செப்டம்பர், 2013

முத்துப் பிறக்குமிடங்கள்


  1. நந்து
  2. சங்கு
  3. மீன்தலை
  4. கொக்கு
  5. தாமரை
  6. மகளிர் கழுத்து
  7. செந்நெல்
  8. மூங்கில்
  9. கரும்பு
  10. பசுவின்பால்
  11. பாம்பு
  12. இப்பி
  13. மேகம்
  14. யானைக் கொம்பு
  15. பன்றிகொம்பு
  16. கமுகு
  17. வாழை
  18. சந்திரன்
  19. உடும்பு
  20. முதலை

பெரியோருக்குரிய இயல்பான ஏழு குணங்கள்


  1. அறம்
  2. பொருள்
  3. இன்பம்
  4. அன்பு
  5. புகழ்
  6. மதிப்பு
  7. பொறுமை

சனி, 21 செப்டம்பர், 2013

செத்தும் பிழைத்தும்

உன்னால்
உன் நினைவால்
தினம் தினம்
செத்துக் கொண்டிருக்கிறேன்.
உன்னால்
உன் நினைவால்
தினம் தினம்
என் கவிதை
பிழைத்துக் கொண்டிருக்கிறது.
                                                                  - சே. முனியசாமி

தமிழ் மென்பொருள்(Tamil Software)கள் சில

 இந்திய மொழிகளின் தொழில் நுட்பம் வழங்கும் தமிழ் மென்பொருள் குறித்த சில அடிப்படை வினாக்கள் பயனாளர்களிடம் இருந்து கேட்கப்பட்டுள்ளன. அவர்களுக்கான விடைகளும் தரப்பட்டுள்ளன. இந்நிறுவனம் வழங்கும் மென்பொருள்கள் பயனுடயதாகவே அமைவதைக் காணலாம். மேலும் அந்நிறுவனம் இலவயமாக மென்பொருள் அடங்கிய குறுந்தட்டையும் அனுப்பி வைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பதிவிறக்கம் செய்யக்கூடிய சில மென்பொருள்கள்

வெள்ளி, 20 செப்டம்பர், 2013

மெழுகுவர்த்தியே வெளிச்சம் கொடு (Light a Candle)

நீ எங்களிடம் கடிந்துகொள்
நீ எங்களை நல்நெறியில் செலுத்து
நீ எங்களுக்கு மாறாக செயல்படு
நீ எங்களை எதிர்த்து நில்
இந்த உலகமே உன்னிடம் பைத்தியம்

ஒரு மணி நேரம்

நிர்ணயிக்கப்பட்ட
நேரம் பேச
ஒப்புக்கொண்டாய்.
ஒரு மணி நேரம்
முன்னதாகவே - என்
பணிகளை ஒத்திக்கு விடுகிறேன்
நீ.....  நீ.......
பேசியது
சில நிடங்கள் மட்டும்.
பேசிய பின்பு
அடுத்த ஒருமணி நேரத்தை
பேசப்பட்ட
உம் நினைவால் கழிக்கிறேன்
ஏன்?
                                                                - சே.முனியசாமி(muniyasethu@gmail.com)

வியாழன், 19 செப்டம்பர், 2013

உபரியாய்...

எந்த பணியும்
முழுதாய் செய்யவில்லை
என்ன பணி செய்தாலும்
என் நேரத்தை
நீ முக்கால் வாசி பங்கு போடுகிறாய்
ஆனால்...
உனது பணி பூர்த்தியாய் விடுகிறது
எனது பணி உபரியாகிவிடுகிறது
ஏன்?          
                          - சே. முனியசாமி 

கருத்துப் புலப்பாட்டு நிலையில் கொடிச்சி


-       த.சத்தியராஜ்
 
சங்கப் பாடல்களில் கொடிச்சி, கொடிச்சியர் என்றாயிரு சொல்லாட்சிகள் காணப்பெறுகின்றன.  அவற்றிற்கு உரையாசிரியர்கள் கொடிச்சி, குறப்பெண், குறமகளிர், குறிஞ்சிநிலப் பெண் என்பதாகப் பொருளமைவு கொண்டுள்ளனர்அகர முதலிகளோ குறத்தி, கொடிச்சி, இடைச்சி முதலியப் பல்வேறு பொருள்கள் தந்து விளக்கம் அளித்துள்ளன.  எனவே, ஈண்டு கொடிச்சி என்பதற்கு குறிஞ்சிநிலப் பெண்டிரைக் குறித்து வந்தனவா அல்லது இடைச்சி என்ற அளவில் நின்றனவா என இக்கட்டுரையில் ஆராயப் பெறுகின்றது.

புதன், 18 செப்டம்பர், 2013

மகளிரால் மலரும் பத்து மரங்கள்


  1. மகிழம் (மகளிர் சுவைத்தால் மலர்வது)
  2. ஏழிலைம் பாலை (நட்பாட மலர்வது)
  3. பாதிரி (நிந்திக்க மலர்வது)
  4. முல்லை (நகைக்க மலர்வது)
  5. புன்னை (ஆடுவதால் மலர்வது)
  6. குரா (அணைக்க மலர்வது)
  7. அசோகு (உதைக்க மலர்வது)
  8. குருகத்தி (பாட மலர்வது)
  9. மரா (பார்க்க மலர்வது)
  10. சண்பகம் (நிழல்பட மலர்வது)

செவ்வாய், 17 செப்டம்பர், 2013

திங்கள், 16 செப்டம்பர், 2013

தெலுங்கும் அதன் இலக்கணங்களும்


தென்னிந்திய ஆந்திர பிரதேசத்தில் அரசு ஏற்புபெற்ற மொழியாக விளங்குவது தெலுங்கு. இம்மொழிஇந்திய அரசால் ஏற்கப்பட்ட 22 மொழிகளில் ஒன்று. இது தமிழ்நாடுகர்நாடகம் ஆகிய பிற மாநிலங்களிலும் அதிக அளவில் பேசப்பட்டு வருகிறது. உலகில் அதிக அளவில் பேசும் மொழிகளில் தெலுங்கு 13வது இடத்தில் உள்ளது. இந்தியாவில் இந்தியை அடுத்து தெலுங்கு மொழி பேசுவோர் அதிகளவில் உள்ளனர் . மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் படி இந்தியாவில் 9,30,00,000 (93மில்லியன்) மக்கள் தெலுங்கு மொழி பேசுகிறார்கள். இம்மொழி 2008ஆம் ஆண்டு நவம்பர் 1 அன்று இந்திய அரசால் செம்மொழியாக அறிவிக்கப்பட்டமைக் குறிப்பிடத்தக்கது.
தெலுங்கிற்கு எழுத்து வடிவிலான இலக்கிய (ஆந்திர மகாபாரதம்) இலக்கண வளங்களின் தொடக்கம் கி.பி.பதினொன்றாம் நூற்றாண்டு என்பது அதன் வரலாறு காட்டும் உண்மை. அதன்பின்பு அதன் வளர்ச்சி அளவிடமுடியாத அளவிற்கு பரந்து விரிந்தது/ விரிந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் அதற்கு முன்பும் இலக்கிய இலக்கண வளங்கள் இருந்தமையையும் சுட்டத் தவறவில்லை. அதன் இலக்கிய வரலாற்றை,
  1. நன்னயருக்கு முற்காலம் - கி.பி 1020 வரை, 2
  2. புராண காலம் - கி.பி 1020 முதல் கி.பி 1400 வரை
  3. ஸ்ரீநாதரின் காலம் - கி.பி 1400 முதல் கி.பி 1510 வரை
  4. பிரபந்த காலம் - கி.பி 1510 முதல் கி.பி 1600 வரை
  5. தெற்கு காலம் - கி.பி 1600 முதல் கி.பி 1820 வரை
  6. நவீன காலம் - கி.பி 1820 முதல் இன்று வரை
எனப் பாகுபடுத்திப் பார்ப்பர்.
 இலக்கண வளத்தின் தொடர்ச்சி ஆந்திரசத்தசிந்தாமணியிலிருந்து தொடங்குகிறது. எவ்விதம் இருப்பினும் அதற்கு முன்பும் ஒரு பரந்துபட்ட இலக்கணமரபு உண்டென்பது அதன் வரலாறு காட்டும் மற்றொரு உண்மை (லலிதா, தெலுகு வியாகரண சரித்திரம், 1996). இக்கட்டுரை தெலுங்கு மொழிக்குரிய இலக்கணங்களை லலிதா அவர்களின் குறிப்புகளைப் பயன்படுத்தித் தமிழில்  பட்டியலிட்டுக்காண்பிக்க முயலுகிறது. 
  இக்கட்டுரை கீற்று இதழில் 9/9/2013(திங்கள்) அன்று வெளியிடப் பட்டுள்ளது. அக்கட்டுரையை மேலும் வாசிக்க:http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=24867:2013-09-09-08-21-30&catid=1:articles&Itemid=264 எனவரும் பக்கதிற்குச் செல்லவும்

ஞாயிறு, 15 செப்டம்பர், 2013

ஏழாம் இலக்கணம் மரபா? நவீனமா?

1.0 முகப்பு
ஆய்வுக் கட்டுரை: ஏழாம் இலக்கணம் மரபா? நவீனமா?
தமிழில் எழுதப்பட்ட இலக்கணங்களை மரபிலக்கணங்கள், நவீன இலக்கணங்கள் எனப் பாகுபடுத்திப் பார்ப்பது பெரும்பான்மையான ஆய்வறிஞர்களின் துணிபு. அவற்றுள் மரபிலக்கணங்களைப் பட்டியலிட இருபதாம் நூற்றாண்டுக்குள் எழுதப்பட்டிருக்க வேண்டும்(2010:112), நூற்பா வடிவில் அமைந்திருக்க வேண்டும்(2010:299-300) என்பது இலக்கணவியல் அறிஞரின் கருத்து. அதாவது அறுவகை இலக்கணம் வரை எழுதப்பட்ட நூல்களை மரபிலக்கணங்களிலும், பிறவற்றை நவீன இலக்கணங்களிலும் வைக்கலாம் என்பது அவ்வறிஞரின் கருத்தாகப் புலப்படுகிறது. அக்கருத்து மரபிலக்கணக் காலநீட்சியை அறிவதற்கான கருதுகோள்கள் எனில், ஏழாம் இலக்கணத்தையும் மரபிலக்கண வரிசையில் வத்துப் பார்ப்பதே பொருத்தமுடையதாக இருக்கும். ஆக, ஏழாம் இலக்கணம் மரபா? அல்லது நவீனமா? என அறிவதாக இக்கட்டுரை அமைகிறது.

 இக்கட்டுரை 10. 09. 2013 அன்று பதிவுகள் இணைய இதழில் வெளியிடப் பெற்றதாகும். ஆக, அக்கட்டுரையை மேலும் வாசிக்க: http://www.geotamil.com/pathivukalnew/index.php?view=article&catid=2:2011-02-25-12-52-49&id=1708:2013-09-10-03-09-03&tmpl=component&print=1&layout=default&page= என வரும் இணையப் பக்கத்திற்குச் செல்லுங்கள்.




வெள்ளி, 13 செப்டம்பர், 2013

வேமனாவின் பார்வையில் பறையர்

வேமனா தெலுங்கு இலக்கியப் புலவர்களில் குறிப்பிடத்தக்கவர். கி.பி.பதினைந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த இவர் சாதிமுறையைக் கண்டித்தவர். இவர் ஆந்திர நாட்டில் இருக்கும் அனைத்து ஊர்களுக்கும் சென்று வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.இவரின் கவிகளில் இலக்கணத்தைக் காணவியாலது. இருப்பினும் படிக்கப்படிக்க இன்பம் தருபவை. இவருடைய மணிமொழிள் அவரின் சமகால வாழ்வியலைப் படம் பிடித்துக் காட்டுவனவாக உள்ளன. அவற்றுள் சில மணிமொழிகள் பறையர் பற்றிக் குறிப்பிடுவனவாக அமைந்துள்ளன. அவை வருமாறு:

பறையன் இறைச்சியைப் புசிக்க
மற்றவர் நெய்(கொழுப்பு) குடிக்கிறாரன்றோ
குலமனைத்தும் ஓர் குலம் என அறிவீர்!
உலகிற்கினியவனே! கேளாய் வேமனே! - பாடல் 49

பறையன் அல்லன் பறையன்
பேச்சு தவறுபவன் பறையன்
அவனைப் பறையன் என்பவன் பறையன்
உலகிற்கினியவனே! கேளாய் வேமனே! - பாடல் 50

பறையனை ஏன் இகழ்வது
உடலிலுள்ள இறைச்சி ஒன்றல்லவோ!
அவனுள் ஒளிக்குமவன் குலம் என்ன?
உலகிற்கினியவனே! கேளாய் வேமனே! - பாடல் 51

வைக்கோலைத் தின்னும் பசுவின் இறைச்சியை உண்ணப்
பறையனவன் என்று கூறுவர் மக்கள்.
பன்றி கோழிகளை உண்ணுபவனை நல்லவனென்பர்
உலகிற்கினியவனே! கேளாய் வேமனே! - பாடல் 102


பார்வை: சர்மா சி.ஆர்., 1992, வேமன்னாவின் மணிமொழிகள், தெலுங்குப் பல்கலைக் கழகம், ஐதராபாத்து.




   

வியாழன், 12 செப்டம்பர், 2013

அகச்சமயங்கள் ஆறு

1. பாடாணவாத சைவம்
2. பேதாவத சைவம்
3. சிவசமவாதி சைவம்
4. சிவ சங்கிராந்தவாத சைவம்
5. ஈசுவர அவிகாத சைவம்
6. சிவாத்துவித சைவம்

புதன், 11 செப்டம்பர், 2013

திங்கள், 9 செப்டம்பர், 2013

ஞாயிறு, 8 செப்டம்பர், 2013

சனி, 7 செப்டம்பர், 2013

அட்டபந்தனம்

  1. கருங்குங்கிலியம்
  2. வெள்ளைக் குங்கிலியம்
  3. சுக்காங்கல்
  4. தேன்மெழுகு
  5. செம்பஞ்சு
  6. கொம்பரக்கு
  7. காவிக்கல்
  8. வெண்ணெய்
இந்த எட்டையும் முறைப்படி சேர்த்து செய்வதே அட்டபந்தனம் எனும் கலவையாகும்.

வெள்ளி, 6 செப்டம்பர், 2013

எண்வகைச் செல்வங்கள்


  1. தனலட்சுமி
  2. தானியலட்சுமி
  3. தைரிய லட்சுமி
  4. சௌரிய லட்சுமி
  5. வித்தியா லட்சுமி
  6. விசய லட்சுமி
  7. கீர்த்தி லட்சுமி
  8. இராச்சிய லட்சுமி

வியாழன், 5 செப்டம்பர், 2013

அட்டமா சித்தி


  1. அணிமா(ஆன்மாப் போலாதல்)
  2. மகிமா(பேருக் கொள்ளுதல்)
  3. கரிமா(இரும்பு மலையினும் கனத்தல்)
  4. இலகிமா(பஞ்சினும் இலேசாதல்)
  5. பிராத்தி(வேண்டுவன அடைதல்)
  6. பிராகாமியம்(நினைத்த போகமெல்லாம் பெறுதல்)
  7. ஈசத்துவம்(யாவர்க்கும் தேவனாதல்)
  8. வசித்துவம்(யாவரும் வணங்க நிற்றல்)

புதன், 4 செப்டம்பர், 2013

இந்திய தேசிய உடைமை வங்கிகள்


  1. அலகாபாத்து வங்கி - கல்கத்தா
  2. ஆந்திரா வங்கி - ஐதராபாத்து
  3. இந்தியன் ஓவர்சிசு வங்கி - சென்னை
  4. இந்தியன் வங்கி - சென்னை
  5. ஓரியண்டல் பேங்க் ஆப் காமர்ஸ் - புதுதில்லி
  6. கனரா வங்கி - பெங்களூர்
  7. கார்ப்பரேசன் வங்கி - உடுப்பி
  8. சிண்டிகேட் வங்கி - மணிபால்
  9. செண்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா - பம்பாய்
  10. தேனா பாங்க் - பம்பாய்
  11. நியூ பாங்க் ஆப் இந்தியா - புதுதில்லி
  12. பஞ்சாப் அண்ட் சிந்து வங்கி - அமிர்தசரசு
  13. பஞ்சாப் நேசனல் பாங்க் - புதுதில்லி
  14. பேங்க் ஆப் இந்தியா - பம்பாய்
  15. பேங்க் ஆப் பரோடா - பரோடா
  16. பேங்க் ஆப் மகாராட்டிரம் - புனா
  17. யுனைடெட் கர்சியல் பேங்க் - கல்கத்தா
  18. யுனைடெட் கர்சியல் பேங்க் ஆப் இந்தியா - கல்கத்தா
  19. யூனியன் பேங்க் ஆப் இந்தியா - பம்பாய்
  20. விஜயா பேங்க் - பெங்களூர்
இவையாவும் நாட்டுடைமை ஆக்கப்பட்ட வங்கிகள்.

திங்கள், 2 செப்டம்பர், 2013

ஐவகை மெத்தைகள்


  1. அன்னத்தூவி
  2. இலவம்பஞ்சு
  3. செம்பஞ்சு
  4. மயில்தூவி
  5. வெண்பஞ்சு

எவ்வாறு வாசிக்க வேண்டும்?

  பொதுவாக, எப்படிப் படிக்க வேண்டும் என்ற கருத்துக்களை எந்தவொரு தமிழ்த் தொகை நூல்களும் கூறியதாகத் தெரியவில்லை. ஆனால் பிராக்கிருதம் போல்வன மொழிகளில் தொகுக்கப் பெற்ற தொகைநூல்கள் அத்தொகை நூல்களை எவ்வாறு வாசிக்கவேண்டும் என சுட்டத் தவறவில்லை எனலாம். இப்பணியைத் தமிழில் இலக்கணங்கள்தான் செய்து வந்தன. இலக்கியங்களில் திருக்குறள் போல்வன கல்வி என்ற தலைப்பில் பதிவு செய்கின்றமையைக் காணலாம்.
     பிராக்கிருத மொழியில் எழுதப் பெற்ற நூலே வஜ்ஜாலக்கம். இதனைத் தமிழில் வைரப்பேழை எனக் கூறலாம் என்பார் மு. கு.ஜகந்நாதராஜா. இக்கவித் தொகுப்பில் இடப்பெறுவதே எவ்வாறு ஒரு கவிதை நூலை வாசிக்க வேண்டும் எனும் கருத்தியல். அக்கருத்தியல் வருமாறு:
        1. நிறுத்திப் படிக்க இயலாமை, சுவையறியாதிருத்தல், இடமறிந்து படிக்காமை, மூக்கால் வாசித்தல், விரைவாக வாசித்தல், வாய்தவறி வாசித்தல், ஈடுபாடின்மை - இவை படிப்பவரின் குறைபாடுகள் ஆகும்.(28)
    2. இயற்சொல், இன்சொல், சந்தம், நடை, மென்மை, தெளிவு, பொருட்புலப்பாடு இவற்றுடன் கூடியதாக பாகதக் கவிதைகளை படிக்கவேண்டும்.(29)
 இவ்வாறு இவை வரையறுத்துக் கூறவேண்டிய காரணம் ஒன்றே. அது இன்பத்துக் கவிகள் என்பதாலேயாம்.

ஞாயிறு, 1 செப்டம்பர், 2013

ஆய்வு செய்யப்பெறாத கல்வெட்டு


  இராமநாதபுரம் மாவட்டத்தில் மேலமடை எனும் ஊர் உள்ளது. இவ்வூரின் வயல்பகுதியில் கல்வெட்டு ஒன்று உள்ளது. இக்கல்வெட்டு சிதைந்த நிலையில் உள்ளது. இருப்பினும் சில எழுத்துக்கள் தெளிவாகத் தெரிகின்றது. இவ்வெழுத்துக்கள் முழுமையும் சிதைந்து விடுவதற்குள் அக்கல்வெட்டு தரக்கூடிய செய்தியை வெளிக்கொணர வேண்டும் என்பதே எம் நோக்கம்.
     அக்கல்வெட்டு குறித்த சில தகவலைக் காண்போம். இக்கல்வெட்டில் இடம்பெறும் எழுத்துக்களை வைத்துப் பார்க்கும்பொழுது சேதுபதி மன்னர் காலத்துக்கு முன்போ அல்லது பின்போ எழுதப்பட்டதாக இருக்கலாம். இக்கல்வெட்டு இரண்டரை அடி நீளம் கொண்டதாகவும், சற்று சாய்ந்த நிலையிலும் காணப்படுகிறது. அதனுள் சூலாயுதம் படமும் அதற்குக்கீழூம், அக்கல்லின் பக்கவாட்டிலும் அவ்வெழுத்துக்கள் இடம்பெற்றுள்ளன. இது அவ்வயலின் நடுவில் உள்ளது. அக்கல்வெட்டு இருந்த இடம் முன்பு மேடாகவும், தற்பொழுது அம்மேடுகள் அகற்றப்பட்டு வயலாகவும் காட்சித் தருகிறது. எனவே கல்வெட்டு ஆராய்ச்சியில் நாட்டமுடையவர்கள் அக்கல்வெட்டுத் தரும் தகவலை வெளிக்கொணர்வார்களாக! இக்கல்வெட்டுக்கு அருகில் பானை ஓடுகள் சிதறிக்கிடப்பதும் கவனத்திற்குரியது.

தகவலாளர்: திருமதி. த. சத்தியராணி நம்பிராஜன்

     இங்கு இடம்பெறும் ஒளிப்படங்கள் நேரில் சென்று கைப்பேசியில் பதிவு செய்யப் பெற்றதாகும்.

புதன், 28 ஆகஸ்ட், 2013

இலக்கண ஆய்வாளர்களின் கவனத்திற்கு

    ...மொழிக் குடும்பங்களின் அங்கங்களை ஒப்புமைப்படுத்தி மூல மொழியைக் கணுதல்(ப:V,  முதல் பதிப்பின் முன்னுரை)

    ...அந்தக் காலத்தில் ஒலி ஒப்புமை உடைய இரண்டு ஒலிகள், துணை நிலை வழக்கில் இருந்தாலும் புணர்ச்சியில் வேறுபாட்டால், புணர்ச்சி எளிமைக் கருதி தனித்தனி ஒலியன்களாகக் கருதலாம்; தொல்காப்பியர் அப்படித்தான் தமிழ்மொழி அமைப்பில் விளக்கியிருக்கிறார் என்றும், அந்த முறை பிறமொழிக்கும் பொருந்தும் என்றும் கூறுவதோடு, வேறொரு மொழிக்குப் பொருத்திக் காட்டி, இதனால் இலக்கணத்தில் எளிமை ஏற்படுகிறது என்று ஒருவர் கட்டுரை எழுதியிருந்தால், தொல்கப்பியத்துக்கும் உலகப் புகழ் ஏற்பட்டிருக்கும்; அந்தக் கட்டுரையாளரும் நல்ல மொழியியல்வாணர் என்ற புகழ் பெற்றிருக்க முடியும். இன்னும் அப்படிப்பட்ட கருத்துக்கள் - மொழியியலில் உள்ள பிரச்சினைக்குத் தீர்வு தரும் செய்திகள் தமிழ் இலகணத்தில் இருக்கிறது என்று யாராவது மெய்ப்பிப்பார்களானால், தமிழ் இலக்கணங்களைக் கற்க உலக மொழியியலாளர்கள் ஓடிவருவார்கள்; தமிழ் இலக்கணங்களுக்கும் சர்வ தேசப் புகழ் தேடிவரும்(பக்.9-10)

      இலக்கணம் ஏன் எழுதப்பட்டது? இலக்கண ஆசிரியனின் மொழி உணர்வு; சமூக உணர்வு என்ன? இலக்கண ஆசிரியன் கையாண்ட தரவுகள் எப்படிப்பட்டவை? அவனுக்குப் பிறமொழித் தெரியுமா? அவன் அந்த மொழியைப் படிக்கவேண்டிய அவசியம் என்ன? என்று சமூகவியல் நோக்கிலும் வரலாற்று நோக்கிலும் விஞ்ஞான ரீதியிலான கேள்விகள் கேட்கப்பட வேண்டும்.

  இலக்கணப் பதிப்பு வேலைகள் விஞ்ஞான ரீதியில் இன்னும் தொடங்கவில்லை; உரையாசிரியர்களின் உரை சரியா? தவறா? என்ற கேள்விகளைக்கேட்டுப் பதில் சொல்வதில்தான் பெரும் பகுதி முதலில் செலவழிக்கப்பட்டது. ஒவ்வொரு உரையாசிரியரும் எழுப்பிய புதிய கேள்விகள் என்ன? அவர்கள் கேள்விகளிலும் பதில்களிலும் புதைந்துள்ள உணர்வுகள் என்ன? போன்ற கேள்விகள் கேட்கப்பட வேண்டும். வரலாற்று உணர்வு ஏற்பட்டதும் உரை நூல்கள் மொழி வரலாற்றை அறிந்து கொள்ளவும் உரையாசிரியர்களின் தனி இலக்கணக் கோட்பாடுகளை ஆராயவும் பயன்படுத்தப்பட்டன. உரையாசிரியர்கள் எந்த நோக்கில் ஏன் உரை எழுதியுள்ளார்கள்? அவர்களுடைய சமூக உணர்வு மொழியுணர்வு என்ன? என்றெல்லாம் உரைகள் ஆராயப்படவேண்டும். இதனால் இலக்கண உரைக் கல்வியும் தொடர்ந்து நடைப்பெற்றுக்கொண்டே இருக்கும்; இருக்கவும் வேண்டும்(ப.23).  

பார்வை: சண்முகம் செ.வை., 2001, எழுத்திலக்கணக் கோட்பாடு, உலகத் தமிழாரய்ச்சி நிறுவனம், சென்னை.    

செவ்வாய், 27 ஆகஸ்ட், 2013

குறுந்தொகையில் யானை பற்றிய பதிவுகள்

                                                                                                           -       . சத்தியராஜ்
சங்க இலக்கியத்தில் யானை பற்றிய பதிவுகள் மிகுதியாக இடம்பெற்றுள்ளன. அவற்றுள் குறுந்தொகையில் அமைந்துள்ள யானை பற்றிய பதிவுகளை மரபுநிலை அடிப்படையிலும் படைப்புநோக்கு அடிப்படையிலும் விளக்குவதாக இக்கட்டுரை அமைகிறது.
முன்னாய்வு
      சங்க இலக்கியதில் விலங்கின விளக்கம் எனும் தலைப்பின்கீழ் விலங்குகளின் உடலுறுப்பு, உணவுமுறை, வாழுமிடம், அவற்றின் செயல்பாடுகள் ஆகியனவற்றை மிக விரிவாக பி.எல். சாமி எடுத்தியம்பியுள்ளார். அவர் விலங்கு நூலார் அடிப்படையில் வகைப்படுத்தியுள்ளார். அவற்றுள் குறுந்தொகையில் 19 இடங்களில் அமைந்துள்ள யானை பற்றிய பதிவுகளைக் கூறியுள்ளார். அவ்வாய்வின் தொடர்ச்சியாக குறுந்தொகையில் இடம்பெற்றுள்ள யானை பற்றிய பதிவுகளை மரபுநிலை மற்றும் திணைப்பகுப்பு அடிப்படையில் வகைப்படுத்துவதாக இக்கட்டுரை அமைகிறது.
குறுந்தொகையில் யானை பற்றிய பதிவுகள்
குறுந்தொகையில் யானை பற்றிய பதிவுகள் 64 இடங்களில் அமைந்துள்ளன. அப்பதிவுகளை மரபுநிலை அடிப்படையில் பின்வருமாறு வகைப்பாடு செய்யலாம். அவை,
·         பொதுப்பெயர்(யானை)
·         இளமைப்பெயர்(கன்று, குழவி)
·         ஆண்பாற்பெயர்(களிறு, வேழம்)
·         பெண்பாற்பெயர்(பிடி, பெட்டை)
பொதுப்பெயர்(யானை)
            கன்று, பிடியென பால்வேறுபாட்டுடன் குறிக்கும் பெயர்கள் யானைக்கு உண்டு. இருப்பினும் யானை எனப் பொதுவாக அழைக்கும் பழக்கம் இன்றுமட்டுமல்லாது சங்கப் புலவரிடமும் அமைந்துள்ளது. அதனடிப்படையில் முப்பது(30) இடங்களில் யானை பற்றிய பதிவுகள் அமைந்துள்ளன. அவற்றைத் திணை அடிப்படையில் பின்வருமாறு வரைபடமாக்கலாம்.
                                                                                     பொதுப்பெயர்(யானை)
குறிஞ்சி
முல்லை
மருதம்
பாலை
1:2,13:1,36:2, 54:3,119:2,129:6,136:3-4,141:4,142:4,161:7,170:3,179:6,247:5,284:1,333:2,357:6

279:6
34:5,75:3,169:1,258:4,359:4
77:4,79:1,232:3-5,255:4-5,260:5-7,331:4,343:2,348:2,388:4-6
இவற்றுள் குறிஞ்சிப் பாடல்களில் 16 இடங்களிலும், முல்லைபாடல்களில் ஓரிட்த்திலும், மருதப்பாடல்களில் 5 இடங்களிலும், பாலைப் பாடல்களில் 9 இடங்களிலும் இடம்பெற்றுள்ளன. நெய்தல் பாடல்களில் யானை பற்றிய பதிவு இடம்பெறாமைக்குத் திணைசார் வாழ்வியலே காரணமாக அமையலாம்.
இளமைப்பெயர்(கன்று, குழவி)
            பார்ப்பு, பறழ், குட்டி, குருலை, கன்று, பிள்ளை, மகவு, மறி, குழவி என்ற ஒன்பதும் இளமைப் பெயர்கள் என்பர் தொல்காப்பியர். அவற்றுல் யானைக்குரிய இளமைப் பெயர்களை,
            யானையுங் குதிரையும் கழுதையும் கடமையும்
            மானோ டைந்தும் கன்றெனற் குரிய                      – தொல்.பொருள். 559
என்றும்,
            குஞ்சரம் பெறுமே குழவிப் பெயர்க்கொடை           – தொல்.பொருள். 563
என்றும் சுட்டுவார். இவற்றால் கன்றும் குழவியும் யானைக்கு இளமைப் பெயர்கள் என்பது பெறப்படும். இவ்விளமைப்பெயர்கள் குறுந்.225:1-2, 394:1 ஆகிய இரு இடங்களில் காணப்பேறுகின்றன. இவ்விரு அடிகளும் தலைவனை இயற்பழிக்குமுகமாக இடம்பெற்றுள்ளன. அப்பாடலடிகள் வருமாறு:
            கன்றுதன் வயமுலை மார்ந்த
            தினைபிடி உண்ணும் பெருங்கல் நாட!      – குறுந்.225:1-2
            முழந்தாள் இரும்பிடிக் கயந்தலைக் குழவி – குறுந்.394:1
என்ற அடிகள் சுட்டும்.
ஆண்பாற்பெயர்(களிறு, வேழம்)
            ஆண்பாற்பெயர்களாக எருது, ஏற்றை(ஏறு), ஒருத்தல், களிறு, சே, சேவல், இரலை, கலை, மோத்தை, தகர், உதல், அப்பர், போத்து, கண்டி, கடுவன் என்பனவும் பிறவும் அமையும் என்பர் தொல்காப்பியர். அவற்றுள் களிறு யானைக்குரிய ஆண்பாற்பெயராக அமையும் என்று பின்வரும் நூற்பாவில் கூறியுள்ளார். அந்நூற்பா வருமாறு:
            வேழக் குரிதே விதந்துகளி றென்றல்                     – தொல்.பொருள். 579
எனும் நூற்பாவில் கூறியமைபோல் குறுந்தொகையில் களிறு எனும் ஆண்பாற்பெயர் 32 இடங்களில் பயின்றுவந்துள்ளமை அறியப்பெறுகின்றன. அப்பதிவு ஐந்திணைகளிலும் இடம்பெற்றுள்ளன.
       இவற்றுள் குறிஞ்சிப் பாடல்களில் 10 இடங்களினும் முல்லை நெய்தல் பாடல்களில் ஓரிடத்திலும் மருதப்பாடல்களில் இரு இடங்களிலும் பாலைப் பாடல்களில் 8 இடங்களிலும் அமைந்துள்ளன.
பெண்பாற்பெயர் (பிடி, பெட்டை)
          பெண்பாற் பெயர்களாக பேடை, பெடை, பெட்டை, பெண், மூடு, நாகு, கடமை, அளகு, மந்தி, பாட்டி, பிணை, பிணவு, பிடி என்ற பதின்மூன்று பெயர்களாக அமைவன என்பார் தொல்காப்பியர்.  இவற்றுள் யானைக்குரிய ஆண்பாற் பெயர்களைப் பின்வரும் நூற்பா சுட்டுகிறது. அந்நூற்பா வருமாறு:
                பிடியென் பெண்பெயர் யானை மேற்றே                          தொல்.பொருள்.596
இப்பாடலடியில் பிடி என்பது யானைக்குரிய பெண்பாற்பெயராக அமைந்தமை அறியப்பெறுகின்றது. இப்பெயர் குறுந்தொகையில் பன்னிரு இடங்களில் இடம்பெற்றுள்ளன. இவற்றுள் குறிஞ்சிப் பாடல்களில் 7 இடங்களிலும், முல்லைப் பாடல்களில் ஓரிட்த்திலும் பாலைப் பாடல்களில் 4 இடங்களிலும் அமைந்துள்ளன. மருதம், நெய்தல் ஆயிரு திணைப் பாடல்களில் இடம்பெற்றமைக்குத் திணைசார் வாழ்வியல் காரணமாக அமையலாம்.
படைப்பு நோக்கம்
                சங்கப் புலவர்கள் யானையைப் படைத்தமைக்குரிய காரணங்களாகப் பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம். அவை: அன்பைப் புலப்படுத்தும் முகமாக, சுற்றத்துடன் இணைந்து வாழும் பாங்கு மக்களிடமும் அமைதல் வேண்டுமென வலியுறுத்துவதாக அமைந்துள்ளன. பாலை பாடல்களில் இவ்விரு தன்மைகள் இடம்பெற்றுள்ளன. பெண் யானையின் பசியை நீக்குவதற்காக ஆண் யானை மெல்லிய கிளைகளையுடைய யாமரத்தின் பட்டையை உரித்து, அதன் நீரை, பெண்யானையைப் பருகச் செய்வது அன்பைப் புலப்படுத்துவதாகவும்; பாலை நிலத்தில் வளர்ந்த யாமரங்களின் அடிப்பகுதியில் குத்தித் தன் பெரிய சுற்றத்தின் பசியைத் தீர்ப்பதாகவும் அமைந்துள்ளன(நித்தியா அறவேந்தன், பழந்தமிழகத்தில் வறுமையும் வளமையும்,பக்.3-4) என்று குறித்திருப்பதும் கவனத்திற்குரிய ஒன்றாகும். இதனைக் குறிக்கும் பாடலடிகள் வருமாறு:
                பிடிபசி களைஇய பெருங்கை வேழம்
                மென்சினை யாவும் பொளிக்கும்                                        குறுந்.37:2-3
என்று பிடிபசியைத் தீர்க்கும் அன்புறு காட்சியும்,
                சிறுகட் பெருநிரை உறுபசி தீர்க்கும்                  குறுந்.255:4
என்பது களிறு சுற்றத்தின் பசியைத் தீர்க்கும் அன்புறு மற்றும் கடமையுணர் காட்சியும் இடம்பெற்றுள்ளன. மேலும் பாலைப் பாடல்களில் யானையது பசியின் கொடுந்தன்மை இடம்பெற்றுள்ளன. அவை குறுந்.37, 79, 202, 255 ஆகிய பாடலடிகளில் இடம்பெற்றுள்ளை அறியப்பெறுகின்றன. சான்றாக,
                கான யானை தோல்நயந்து உண்ட
                பொரிதால் ஓமை வளிபொரு நெடுஞ்சினை     குறுந்.79:1-2
என்பதாகக் குறிப்பிடப் பெறுகிறது. இவ்வடியில் பாலைநிலத்தில் நீரின்மையால் ஓமை மரத்தின் மரப்பட்டையை உரித்து உண்ணும் பசியின் கொடுந்தன்மை இடம்பெற்றுள்ளது. இத்தன்மைகள் சங்க மக்களின் வறுமைநிலையை மறைமுகமாக எடுத்தியம்புவதாகவும் அமைந்துள்ளன.
                யானைகள் குன்றுகளிலும் மலைகளிலும் சோலைகளிலும் காடுகளிலும் வழும் தன்மையுடையன (சங்க இலக்கியத்தில் விலங்கின விளக்கம், பக்.278-279) என்பார் பி.எல்.சாமி. அத்தன்மையைக் குறுந்தொகைப் பாடலடியொன்று எடுத்தியம்புகிறது. அப்பாடலடி வருமாறு:
                சிறுகட் பெருங்களிறு வயப்புலி தாக்கித்
                தொல்முரண் சோரும் துன்னருஞ் சாரல்                           குறுந். 88:2-3
என்ற அடியில் நெடுநாள் பகையைத் தீர்த்துக் கொள்ளும் யானைகள் வாழுமிடமாக துன்னருஞ் சாரல் இடம்பெற்றுள்ளது. இதுபோல் அமைந்த பாடலடிகளில் குறிஞ்சிநில மக்களின் வாழ்வியற் சார்புகளை காணமுடிகின்றது.
                சங்க மக்களின் வளமை, வறுமை, சமுதாயச் சார்பு, அன்பு வெளிப்படும் தன்மை, வாழிடம் ஆகியன்வற்றை எடுத்தியம்புவதாக யானை எனும் கருப்பொருள் இடம்பெற்றுள்ளது.
தொகுப்புரை
·         பொதுப்பெயர், இளமைப்பெயர்,ஆண்பாற்பெயர், பெண்பாற்பெயர் என்ற பாகுபாட்டில் யானை பற்றிய பதிவுகள் குறுந்தொகையில் இடம்பெற்றுள்ளன.
·         பொதுப்பெயர் அதிக அளவில் பாடப்பெற்றுள்ளன.
·         களிறு பற்றிய பதிவே குறுந்தொகை ஐந்திணைகளிலும் இடம்பெற்றுள்ளன.
·         யானைக் கருப்பொருள் வழி சங்க மக்களின் வாழ்வியற் கூறுகளை அறியமுடிகின்றது.
 (இக்கட்டுரை ஆரல்வாய்மொழி அறிஞர் அண்ணா கலை அறிவியல் கலைக் கல்லூரியில் நிகழ்த்தப்பட்ட பன்னாட்டுக் கருத்தரங்க் வசிக்கப்பெற்றதும், வெளியிடப்பெற்றதுமாகும் - 2010)